மிஸ் சென்னை பட்டம் பெற்ற போது திரிஷா எப்படி இருந்துள்ளார் பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. ஆரம்ப காலத்திலிருந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை திரிஷா.

தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் குந்தவை பிராட்டியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை நடிகர்கள் அஜித் விஜய் ரஜினி கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக திரிஷா இந்த படத்தில் நடிகை திரிஷா வை இளவரசியாக அழகு ராணியாக காட்டியிருக்கின்றனர்.

இந்த திரைப்படம் நடிகை திரிஷா ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் 30-ம் தேதி உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக நடிகை திரிஷா இளவரசியாக நடித்திருப்பது குறித்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

ஆனால், நான் இப்போது இளவரசி கிடையாது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பே இளவரசியாக ஆகிவிட்டேன் என்று கூறுவது போல நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

---- Advertisement ----

கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை என்ற அழகி போட்டியில் நடிகை திரிஷா வெற்றி பெற்றார். அதன்பிறகு மிஸ் சேலம் என்ற அழகி போட்டியில் நடிகை திரிஷா வெற்றி பெற்றார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா மிஸ் சென்னை போட்டியில் வெற்றி பெற்ற போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் திரிஷா அப்போ எப்படி இருந்தாரோ.. அப்படியே தான் இப்போவும் இருக்கிறார் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

---- Advertisement ----