40 வயதுகளை கடந்தும் திரிஷாவுக்கு திருமணம் ஆகாதது ஏன் தெரியுமா?

திரிஷா,(Trisha) தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகை. பலரது கனவுக்கன்னி இவர்தான். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளின் முக்கியமான ஒருவர் திரிஷா. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், மிஸ் சென்னை பட்டம் வென்ற பின், தமிழ் சினிமாவில் லேசா லேசா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த சாமி படம், திரிஷாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக்கியது.

Trisha

அடுத்து கில்லி, குருவி, உனக்கும் எனக்கும், மன்மதன் அம்பு, ராங்கி, விண்ணைத் தாண்டி வருவாயா, அரண்மனை 2, ஆறு, சகலகலா வல்லவன், சம்மர், பரமபதம், உனக்கு 20 எனக்கு 18, ஆதி, சதுரங்கவேட்டை 2 உள்ளிட்ட பல படங்களில் திரிஷா நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக பேட்ட படத்திலும் நடித்தார் திரிஷா. தமிழ் சினிமாவுக்குள் வந்து 20 ஆண்டுகள் கடந்தும், இன்னும் அழகும் இளமையும் மாறாத அழகில் அம்சமாக தெரிகிறார் திரிஷா. வயது, இவரது அழகை மறைக்கிறதே தவிர, இன்னும் 25 வயது பெண் போலவே தோற்றத்தில் காட்சியளிக்கிறார் திரிஷா.

Trisha

96 படத்துக்கு பிறகு, இன்னும் ரசிகர்களை தன்வசப்படுத்திய திரிஷா பொன்னியின் செல்வன் நடித்த பிறகு, அவரது மார்க்கெட் மேலும் பலமடங்கு உயர்ந்தது. அதுவரை ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த த்ரிஷா, அப்படியே அதை இரட்டிப்பாக்கி விட்டார் என்று கூறப்படுகிறது

Trisha

பொன்னியின் செல்வன் 2ம் பாகம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படங்களைத் தொடர்ந்து, இன்னும் இவரது சம்பளம் உயர்வதற்காக வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக, பொன்னியின் செல்வன் குந்தவை கேரக்டரில் த்ரிஷாவின் அழகும், மிருதுவான நடிப்பும், மென்மையான பேச்சும் ரசிகர்களை சொக்க வைத்து விட்டது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்வே, திருமண நிச்சயதார்த்தம் வரை வந்த திரிஷா திருமணம் நின்று போனதற்கான காரணம், இப்போது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை திரிஷாவின் அம்மா உமாவே கூறியுள்ளார்.

---- Advertisement ----

Trisha

அதாவது சில ஆண்டுகளுக்கு முன், திரிஷாவுக்கும், தொழிலதிபர் வருண் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவாகி உள்ளது. நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. ஏற்கனவே, பரஸ்பரம் இரு வீட்டாரும் அமர்ந்து பேசி, பல விஷயங்களை கலந்து ஆலோசித்து முடிவு செய்து, ஏறக்குறைய எல்லா விஷயங்களையும் இரு தரப்பினரும் சம்மதித்த பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவானது.

Trisha

ஆனால், திடீரென இந்த திருமணம் நின்றுபோனது. இதனால், திரிஷாவுக்கு மீண்டும் திருமணம் எப்போது என, தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திரிஷா பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளிலும் இதுபற்றிய கேள்வி எழுந்தாலும், திரிஷா தரப்பில் சிறு புன்னகை மட்டுமே பதிலாக இருக்கிறது. இந்நிலையில், வருண் என்பவருடன் நிச்சயித்த திருமணம் நின்றுபோனது குறித்து, திரிஷாவின் அம்மா உமா, வெளிப்படையாக சில, விஷயங்களை கூறி இருக்கிறார்.

Trisha

இரு தரப்பும் பேசி முடிவெடுத்த நிலையில், சில விஷயங்கள் சரிவராது என்று பின்னர்தான் தெரிய வந்தது. இதில், சில பெரியவர்களும் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். சமரசம செய்துகொள்ளவே முடியாத விஷயங்கள் என்பது தெரிந்த பிறகும், சிலவற்றை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. அதனால், இந்த திருமணம் நடக்காமல் பாதியிலேயே நின்றுபோனதாக குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்துக்கு பிறகு, திரிஷா நடிக்க, மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லை என்பதும், இதில் முக்கிய காரணமாக தெரிகிறது. இதனால்தான், திரிஷா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல், நடிப்பு தாரகையாக வலம் வருகிறார்.
மேலும், இதுபோன்ற முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

---- Advertisement ----