“பேண்ட் எங்கம்மா…” – மயில் போன்ற அழகில் ஜொலிக்கும் திரிஷா..! – குவியும் லைக்குகள்..!

தமிழ் சினிமா உலகில் நடிகர்கள் விஜய் அஜீத் விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து விட்டார் நடிகை திரிஷா நடிகர் விஜய் நடிப்பில் கில்லி திருப்பாச்சி ஆதி குருவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் விஜய் சேதுபதி நடித்த 96 ஆகிய திரைப்படங்கள் நடிகை திரிஷாவின் அக்மார்க் அடையாளமாக இருக்கின்றது.

முன்னணி நடிகையாக இருந்த நடிகை திரிஷா ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில், இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பைப் பெறவில்லை.

அடுத்தடுத்து கதாநாயகியாக நடிக்கும் முடிவை எடுத்தவர் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் சமீபத்தில் பரமபத விளையாட்டு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

ராங்கி, கர்ஜனை உள்ளிட்ட திரைப்படங்கள் இன்னும் வெளியாகாமல் பொட்டியிலேயே தூங்குகிறது. தற்போது, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை பிராட்டியார் கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார் நடிகை திரிஷா.

---- Advertisement ----

இந்த புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதோடு, பட விழாக்களில் கலந்து கொண்ட திரிஷாவின் நவ நாகரீக உடைகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அந்த வகையில், மயில் நிறத்திலான சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு அழகு தேவதையாக ஜொலிக்கும் நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் எங்கம்மா..? என்று கலாய் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----