உதட்டோடு உதடு வைத்து.. என்னை இப்படி போக சொல்றீங்களா..? – தடாலடியாக பதிலளித்த வாணி போஜன்..!

தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி சின்னத்திரை நயன்தாரா என்று பெயரெடுத்தவர் நடிகை வாணி போஜன். சமீப காலமாக, திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் ஓ மை கடவுளே என்ற திரைப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வாணி போஜன் படங்களில் என்னை கிட்டத்தட்ட கமிட் செய்து விட்டு கடைசி நேரத்தில் இவர் சீரியல் நடிகை தானே எதற்காக படத்தில் கமிட் செய்தீர்கள் என்று உதாசீனப்படுத்தி படத்திலிருந்து நீக்கி இருக்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்கும்போது மிகவும் மன வருத்தப்பட்டேன். நடிகை என்றால் நடிகைதான் அதில் என்ன சீரியல் நடிகை சினிமா நடிகை என்ற பாகுபாடு என்று எனக்கு புரியவில்லை இது எனக்கு மிகவும் மன வேதனையாக இருந்தது.

மட்டுமில்லாமல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் அதனால்தான் படங்களில் வாய்ப்பு இல்லை என்று கூட கூறுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பல படங்களில் என்னை கவர்ச்சியாக நடிக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். நான் வேண்டாம் இந்த படத்திற்கு தேவையில்லை என்று கூறினேன்.

ஆனாலும் வேறு நடிகை நடித்து அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் இந்த படத்தின் வெற்றியை காட்டி இந்த படத்தில் நீ நடித்திருக்க வேண்டும் நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டாய் என்று கூறினார். அதற்காக நான் வருத்தப்படவில்லை.

---- Advertisement ----

படப்பிடிப்பின்போது உதட்டோடு உதடு வைத்து அடிக்கும் லிப் லாக் காட்சிகளை படக்குழுவினர் ரசிப்பதில்லை. ஒவ்வொருவரும் அவருடைய வேலையை கணிப்பது நேரம் சரியாக இருக்கும்.

அது மாதிரியான படங்களில் நடித்து விட்டு நான் வெளியே செல்லும் போது முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு செல்ல எனக்கு பிடிக்காது. கவர்ச்சி காட்டும் அளவுக்கு எனக்கு வயதும் இல்லை என்று தடாலடியாக பதிலளித்திருக்கிறார் நடிகை வாணி போஜன்

---- Advertisement ----