இது வேறையா..? – முன்னணி இளம் நடிகருடன் வாணி போஜன் காதல்.?? – யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிபோட்டுடும்..!

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது நடிகை வாணி போஜன் நடிகர் ஜெய் ஆகிய இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்கள் பலரும் இவரை அழைக்கின்றனர். கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை வாணி போஜன் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயுமொளி நீ எனக்கு, லவ், ஊர்க்குருவி, ரேக்ளா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் பல பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகின்றது. இந்நிலையில் நடிகர் வாணி போஜன் குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது அதாவது இயக்குனர் ஒருவர் வாணி போஜன் கதை சொல்ல சென்று இருக்கிறார். அப்போது அவருடன் நடிகர் ஜெய் இருந்ததால் பிறகு கதை சொல்கிறேன் என்று கூறி திரும்பி வந்து விட்டாராம்.

பிறகு நான்கைந்து முறை வாணி போஜனிடம் கதை சொல்ல முயற்சித்தபோதெல்லாம் நடிகர் ஜெய்யும் வாணிபோஜனுடன் இருந்ததால் கதை சொல்லாமலே திரும்ப வந்துள்ளார் எனவும் இதனால் வாணிபோஜனிடம் கதை சொல்லாமலேயே இருக்கிறார் அந்த இயக்குனராகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

---- Advertisement ----

இந்த நிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை அஞ்சலிக்கும் இருந்தது. அஞ்சலி இந்த காட்சியில் நடிக்க மாட்டார்.. அந்த காட்சியில் நடிக்க மாட்டார் என்றுநடிகர் ஜெய் ஏகத்துக்கும் அட்ராசிட்டி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் நடிகை அஞ்சலியின் மார்க்கெட் சரிந்து விழுந்தது.

இந்நிலையில் நடிகை வாணி போஜனுடன் ஜெய் நெருக்கமாக இருப்பது பெரும் சலசலப்பை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே நடிகை வாணி போஜன் ட்ரிபிள்ஸ் என்ற வெப்சிரிஸில் ஜோடியாக நடித்திருந்தனர்.

தற்போது திரைப்படம் ஒன்றிலும் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நடிகர் ஜெய் அல்லது வாணிபோஜன் யாராவது ஒருவர் விளக்கம் கொடுத்தால் தான் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

---- Advertisement ----