“என்னோட அந்த உறுப்பை தொட்டான்.. அதுக்கு அப்புறம் அவன் பொண்டாட்டியை கூட..” வரலட்சுமி தடாலடி..!

தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டாராக திகழும் சரத்குமாரின் மூத்த மனைவியின் மகள் நடிகை வரலட்சுமி. தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.


அண்மையில் கூட நடிகை வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் சீரும் சிறப்புமாக பெரியவர்களின் முன்னிலையிலும், உறவினர்களின் முன்னிலையிலும் நடந்து முடிந்து. அந்த விஷயம் இணையத்தில் பரபரப்பானதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களை பெற்றது.

நடிகை வரலட்சுமி..

தமிழ் திரையுலகை பொருத்த வரை நடிகை வரலட்சுமி லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசனோடு இணைந்து போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகநாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் தமிழில் சில படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தாரை தப்பட்டை என்ற படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.


எனினும் எதிர்பார்த்த அளவு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று இவர் அங்கு பல முன்னணி நடிகர்களோடு நடித்து வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

---- Advertisement ----

என்னோட அந்த உறுப்பை தொட்டான்..

ஹீரோயினியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் வில்லியாகவும் சில படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தனது நடிப்பின் மறுபக்கத்தை வெளிப்படுத்தியதை அடுத்து இவரது நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு தயங்காமல் பதிலளித்து இருக்கக்கூடிய வரலட்சுமி நான் செய்த விஷயத்தால் அவன் பொண்டாட்டிய கூட தொட யோசிக்க வேண்டும் அப்படிப்பட்ட சம்பவத்தை செய்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் ஆவலாக அப்படி என்ன கேள்விக்கு இவர் இப்படி பதில் அளித்திருக்கிறார் என்று திக்கு முக்காடி வருகிறார்கள். அந்தக் கேள்வி என்ன என்று தெரியுமா?


அது உங்களிடம் எப்போதாவது யாராவது மிஸ்பிஹேவ் செய்திருக்கிறார்களா? என்று கேட்ட கேள்விக்கு அப்கோஸ் நிச்சயமாக எனக்கும் அந்த அனுபவம் உள்ளது என்று நடிகை வரலட்சுமி கூறி இருக்கிறார்.

அத்தோடு பப்பில் இருக்கும் போது முகம் தெரியாத ஒருவன் தன் பின் பகுதியை தட்டி விட்டு சென்றதாகவும் அதனை அடுத்து கோபத்தோடு அவனை வெழுத்து வாங்கியதாகவும் கூறியிருக்கிறார்.

வரலட்சுமி தடாலடி பேச்சு..

மேலும் பப்பில் தன் பின் பகுதியை தொட்ட அந்த நபரை வார்த்தையால் மட்டுமல்லாமல் கைகளாலும் நைய புடைத்து கும்மாங்குத்து குத்திய கதையை சிரித்த வண்ணம் நாசுக்காக சொல்லிவிட்டார்.

இதனை அடுத்து என்னோட அந்த உறுப்பை தொட்டால் அதுக்கு அப்புறம் அவன் பொண்டாட்டிய கூட தொட நினைத்துப் பார்க்க மாட்டான். அந்த அளவுக்கு என்னுடைய செயல் இருந்தது என்று தடாலடியாக பேசிய வரலட்சுமியின் பேச்சானது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.


இதனை அடுத்து வரலட்சுமியின் இந்த பேச்சை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள் பயந்த படியே அட இவ்வளவு பெரிய ஹீரோயினியாக இருந்தாலும் வில்லத்தனத்தை படத்தில் காட்டி இருக்கும் இவர் வில்லியாகவே அந்த நபரையும் தாக்கி விட்டார் என பேசி வருகிறார்கள்.

வேறு சில ரசிகர்களோ இவரைப் போல பெண்களிடம் அத்துமீரும் ஆண்களுக்கு சரியான பதில் அடியைத் தான் போல்டாக வரலட்சுமி தந்திருக்கிறார். எனவே அவரை பாராட்ட வேண்டும் என பாராட்டி இருக்கிறார்கள்.

---- Advertisement ----