நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் இந்த படத்தின் பேட்ச் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது.
இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறார் நடிகர் விஜய். இந்த படத்தில் நடிகர் விஜய் 14 வயது சிறுவனாக தோன்றக்கூடிய சில காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக கூறுகிறார்கள்.
அதற்காக அந்த காட்சிகளை தத்ரூபமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் ஸ்டூடியோ ஒன்றில் நடிகர் விஜய் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கக்கூடிய வெங்கட் பிரபு சமிபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் விஜய் போன்ற ஒரு ஆள் நமக்கு ஹீரோவாக கிடைத்தால் எப்படியான கதைகளை எல்லாம் எடுக்கலாம்.
திடீரென ஒரு ஏலியன் நடிகர் விஜய் கடத்தி சென்று அவருக்கு இந்த மனிதர்களுக்கு இல்லாத சூப்பர் பவரை கொடுத்து விடுகிறது.
அப்படி சூப்பர் பவரை பெற்ற நடிகர் விஜய் எப்படி எல்லாம் காட்ட முடியும். ஒரு இயக்குனராக கிழிச்சு எடுத்து விட மாட்டோம்.. என்று பேசி இருக்கிறார்.
எல்லாமே புலி பைரவா சர்கார் பீஸ்ட் வாரிசு மாதிரி இருந்தா என்னடா பண்றது 😂#VidaaMuyarchi pic.twitter.com/IyhPMkvMPd
— Arun (@ArunjAk_) September 1, 2023
நடிகர் விஜய் வைத்து பேண்டஸி திரைப்படம் எடுப்பதெல்லாம் சரிதான். எல்லாமே புலி சூரா பைரவா போன்ற படங்களாக இருந்தால் என்ன செய்வது என்று கலாய்க்கும் விதமாக தன்னுடைய பதிவு ஒன்று எழுதி இருக்கிறார் ஒரு இணைய வாசி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.