5 லட்சம் கொடுத்தால் 500 கோடிப்பே.. சென்னையில் “சதுரங்க வேட்டை 3” கோடிகளை இழந்த பிரபல நடிகர்..!

கிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நான் நடித்துள்ளேன். 30 வருடங்கள் சினிமாவிலும், அதன் பிறகு சொந்தமாகவும் தொழில் செய்கிறேன். எனது கடையில் வாடகை தாரராக இருந்த ராம்பிரபு என்பவர் என்னிடம் நட்பு ரீதியில் பழகினார். அவருடன் கைத்துப்பாக்கி வைத்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சபாரி உடையில் இருப்பார்கள்.

சைரன் கருவி பொருத்திய காரில் தான் அவர் உலா வருவார். இதனால் அவர் ஒரு வி.ஐ.பி.யாக இருக்கலாம் என்று நினைத்தேன்.துப்பாக்கி பாதுகாப்பு ஏன்? எனக் கேட்டதற்க்கு இரிடியம் என்ற பொருள் தனக்கு கிடைத்ததாகவும், அந்த பொருளை மத்திய அரசு உதவியுடன், ஆஸ்திரேலியாவில் உள்ள கம்பெனிக்கு விற்ப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.3 லட்சம் கோடி என்றும் கூறினார்.

இதனால் தான் எனக்கு மத்திய அரசு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது, என்றும் ராம்பிரபு கூறினார். மேலும் இரிடியம் விற்க்கும் தொழிலை சட்டப்பூர்வமாக செய்வதாக சொன்னார். இது சம்பந்தமாக சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும், விருதுநகர் பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்றிலும் நடந்த கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன்.

5 லட்சம் கொடு.. 500 கோடி தருகிறேன்…

அதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கு பெற்றனர். இதனால் ராம்பிரபு சொன்னதை உண்மை என்று நான் நம்பினேன். என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால்,ரூ.500 கோடியாக உங்களுக்கு திருப்பி தருகிறேன் என்றும் நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார்.

ராம்பிரபுவின் பேச்சை நம்பி நான் எனது வங்கி கணக்கு மூலமாகவும், நண்பர்களிடம் கடனாக பெற்றும், ரூ.1.81 கோடி கொடுத்தேன். அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். ஒரு முறை நேரில் சந்தித்த போது, ரூ.500 கோடி கண்டெய்னர் லாரி மூலம் வருகிறது என்றும், வந்தவுடன் தருவதாகவும் சொன்னார்.

---- Advertisement ----

மோடியை தெரியும் என்றார்..

அவரை பற்றி விசாரணை செய்த போது இதே போன்று ஏராளமான நபர்களிடம் அவர் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததாகவும் விருதுநகர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என தெரிய வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தான் இழந்த தொகையை மீட்டுத்தருமாறு சென்னை மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார் நடிகர் விக்னேஷ்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கமுள்ள கிருஷ்ணன் கோவில் அவரது ஊர். சென்னையில என் கடைககு வந்து எனக்கு அறிமுகமானார். அவரோட கார்ல மத்திய அரசு முத்திரை இருக்கும். எனக்கு மோடியை தெரியும்ன்னு சொன்னார்.. பந்தாவா வலம் வருவார். சுத்தி எந்நேரமும் செக்யூரிட்டி இருப்பாங்க இதையெல்லாம் பார்த்து அவரை வி.ஐ.பின்னு நம்பினேன்.

** எனக்கு மோடியை தெரியும்ன்னு சொன்னார்.. ஆனால்.. மோடிக்கு என்னை தெரியாது..ன்னு சொல்றதுக்குள்ள 1 கோடியே 80 லட்சத்த குடுத்துட்டீங்களே கோபால்..

---- Advertisement ----