விஜய்யை பார்க்க வந்த பாட்டி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..!

விஜய்யை பார்க்க வந்த பாட்டி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..!

தமிழ் திரைப்படத்தில் இன்று உச்சகட்ட நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை.


தமிழ் திரை உலகில் அதிகளவு ரசிகர்களைக் கொண்டிருக்க கூடிய தளபதி விஜய் ஆரம்பகால திரைப்படங்களில் சற்று சறுக்கல்களை சந்தித்து இருந்தாலும் பின்னாளில் பட வெற்றி படங்களை கொடுத்த இவருக்கு பூவே உனக்காக திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது.

தளபதி விஜய்..

இதனை அடுத்து வெளி வந்த படங்களில் நடிகர் எம்ஜிஆரை போல மக்களுக்கு சேவை செய்யக்கூடிய விதத்தில் உள்ள வசனங்களை பேசி அசத்தியதோடு விரைவில் அரசியலில் களம் காண இருக்கிறார் என்பதை இவரது ஒவ்வொரு படமும் விவரிக்க கூடிய வகையில் இருந்தது.

அத்துடன் அண்மையில் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து பல அரசியல் தலைகளும் தடுமாறக்கூடிய அளவு தற்போது அவரது கட்சியில் சேரக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகளவு இருப்பதை பார்த்து பலரும் வியந்து போய் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஒருதலை ராகம் படத்தில் நடித்த நடிகை ரூபா.. இப்போ எப்படி இருக்காங்கனு தெரிஞ்சா மிரண்டே போயிடுவீங்க..!


நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் இவரது கட்சி களத்தில் இறங்கும். அதற்கு உரிய வேலைகளை துரிதமாக பார்த்து வரக்கூடிய தளபதி தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

விஜய்யை பார்க்க வந்த பாட்டி..

இந்நிலையில் கிராமங்கள் தோறும் இவரது கட்சி படு வேகமாக பரவி இளைஞர்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. அத்தோடு பல ரசிகர்கள் நடிகர் விஜயின் இல்லம் நோக்கி படையெடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் அண்மையில் விஜய்யின் இல்லம் அமைந்திருக்கும் இடத்தில் கேட்டின் முன் நின்று பல ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் சில பேர் விஜய்யிடம் உதவி கேட்டு செல்கிறார்கள்.


அப்படி உள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நீங்கள் அவ்வப்போது இணையத்தில் பார்த்து இருப்பீர்கள். இந்நிலையில் வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் பார்ப்பதற்காக அவர் வீட்டுக்கு சென்று இருந்தார்.

இன்ப அதிர்ச்சி தந்த விஜய்..

எனினும் நீண்ட நேரம் விஜய்யை பார்ப்பதற்காக காத்திருந்த பாட்டி நெடு நேரம் ஆகியும் நடிகர் விஜய் வராததால் திரும்பி சென்று விட்டார். இவர் திரும்பி சென்றதோடு நின்று விடாமல் தன்னுடைய ஏமாற்றத்தை youtube சேனல் ஒன்றிலும் பதிவு செய்தார்.

இதனை அடுத்து தற்போது தளபதி அந்த பாட்டியை அழைத்து அவருடைய குறைகளை விசாரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவுக்குப் பிறகு அவரிடம் நிறைய மாற்றங்களை பார்க்க முடிகிறது என சினிமா வட்டாரத்தில் கருத்துக்கள் அடிபடுகின்றன.


இதையும் படிங்க: ஏன் இப்டி பண்ண மாமா..? கதறி அழும் ராஜலட்சுமி..!

இதனை அடுத்து நடிகர் விஜய் மற்றொரு எம்.ஜி.ஆராக ஆட்சியைப் பிடித்து மக்களுக்கு சேவை செய்வாரா? என்பது வரக்கூடிய நாட்களில் அனைவருக்கும் வெட்ட வெளிச்சம் ஆகும். அந்த நாள் வரை காத்திருப்பதன் மூலம் நடிகர் விஜய் அரசியலில் சோபிப்பாரா? என்பது நமக்குத் தெரிந்துவிடும்.

எனினும் மக்கள் சேவை ஆற்ற விரும்பக்கூடிய நடிகர் விஜய்யை பலரும் பாராட்டி வருவதோடு மட்டுமல்லாமல் இது போன்ற செயல்களை ஊக்குவிப்பதின் மூலம் சமுதாயத்திற்கும் சமுதாயத்தில் உள்ள மக்களுக்கும் நன்மை கிடைக்கும்.