விஜய் யேசுதாஸ் மனைவி டைவர்ஸ்.. தள்ளிகிட்டு போன தனுஷ் பட நடிகர்.. பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

கூத்தாடிகளின் குடும்பமே இப்படித்தான் என மக்கள் பலர் பேசுவதற்கு உதாரணமாக அத்தாட்சியாக தற்போது ஒரு சம்பவம் நடத்தேறியுள்ளது.

தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் குறிப்பாக தமிழ் தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகர் ஆகவும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் அனைவராலும் அறியப்படுபவர் விஜய் ஏசுதாஸ்.

விஜய் யேசுதாஸ் மனைவி:

இவர் பழம்பெரும் பாடகரான ஏசுதாஸின் மகன் என்பது அனைவரும் அறிந்தது தான். தமிழ், மலையாளம் தெலுங்கு, கன்னடம் மற்றும் துலு உள்ளிட்ட மொழிகளில் பின்னணி பாடுகராக இவர் சிறந்து விளங்கி வந்தார்.

பிரபலமாக பாடகராகவும் இவர் பார்க்கப்பட்டார். கடந்த 2007ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் தோழியான தர்ஷனாவை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

--Advertisement--

இவர்களுக்கு அம்மெயா என்ற மகளும் இருக்கிறார். இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று சென்று கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து,

தனித்தனியே வாழ்ந்து வந்தார்கள். இப்படியான நேரத்தில் தான் விஜய் யேசுதாஸின் மனைவியான தர்ஷனா,

தனது வீட்டில் வைத்திருந்த 60 சவரன் நகை தொலைந்து போய்விட்டதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

நகைத்திருட்டு நாடகம்:

அந்தப் புகாரில் டிசம்பர் மாதமே தன்னுடைய நகைகள் திருடு போய்விட்டதாகவும், ஆனால் பிப்ரவரி மாதம் தான்,

லாக்கரை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்ததாக அந்த புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதையடுத்து போலீசார் தர்ஷனாவின் வீட்டில் வேலை பார்த்த 11 பேரிடம் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்பவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அது மட்டும் இல்லாமல் தர்ஷனா விஜய் யேசுதாஸ் இருவரும்,

கடந்து சில மாதங்களாக கருத்து வேறு காரணமாக அவரவர் பிரிந்து வாழ்ந்து வருவதால் விஜய் யேசுதாஸ் தர்ஷனாவை வந்து பார்ப்பதே கிடையாது.

இதனால் விஜய் ஏசுதாஸ் அந்த நகைகளை திருட நிச்சயம் வாய்ப்பே கிடையாது. அத்துடன் இந்த லாக்கரின் சீக்ரெட் நம்பர் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவியான தர்ஷனா இருவருக்கு மட்டுமே தெரியும்.

வில்லன் உடன் கள்ளத்தொடர்பு:

அப்படி இருக்கும் சமயத்தில் யார் வந்து நகைகளை திருட போகிறார்கள்? என போலீசார் விசாரித்த போது தர்ஷனா மீதே சந்தேகம் எழுந்துள்ளது.

நகைகளை ஏதேனும் செய்துவிட்டு நாடகம் ஆடுகிறாரா? என்ற பலகோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

அந்த சமயத்தை தான் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரம் குறித்து பெரும் குண்டு ஒன்றை தூக்கி போட்டார்.

ஆம், விஜய் யேசுதாஸின் மனைவியான தர்ஷனா வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுசுக்கு வில்லனாக நடித்த அமிதாஷ் பிரதான் உடன் ரகசிய தொடர்பு கொண்டு,

அவருடன் கள்ளக்காதலில் இருந்து வந்ததால் இந்த விஷயம் தனது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வர நகை தொலைந்து விட்டதாக கூறி நாடகமாடினார்.

ரகசியம் உடைத்த பயில்வான்:

அது மட்டும் இல்லாமல் இவர்களின் இந்த கள்ள உறவுக்கு காரணமாக இருந்ததே நடிகர் தனுஷ் தான் என்று கூறி அதிர வைத்தார் பயில்வான் ரங்கநாதன்.

அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வேடிக்கை பார்க்க சென்ற தர்ஷனாவை தனுஷ் தான் அமிதாஷிடம் அறிமுகப்படுத்தினாராம்.

பின்னர் அவர்கள் இருவரும் பார்ட்டி, பப் என நெருக்கமாக பழகி கள்ள உறவில் ஈடுபட்டு வந்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறி ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவுக்கே பேரதிர்ச்சி கொடுத்தார்.

இதனால் தான் மனைவி தர்ஷனாவை விஜய் யேசுதாஸ் விவாகரத்து செய்து தனித்தனியே பிரிந்து வாழ்வதற்கு காரணமாக அமைந்ததாக கூறி ரகசியத்தை போட்டு உடைத்து அம்பலமாகிவிட்டார்.

இந்த விஷயம் வெளியில் வெடிக்க தர்ஷனாக நகை திருட்டு நாடகமாடியதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறி பெரும் பரப்பரப்பை கிளப்பினார்.