வாய் திறப்பாரா “ஜெய் பீம்” – விருமன் பட நடிகை விடிய விடிய பலாத்காரம்..! – பரபரக்கும் கோலிவுட்..!

ஒரு உண்மை கதையை எடுத்து அதனை தன்னுடைய சித்தாந்ததிற்கு ஏற்ப புனைந்து தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயத்தை காயப்படுத்தி ஹிட் படம் குடுத்துட்டேன் என மார்தட்டிக்கொண்ட எதற்கும் துணிந்தவன் நடிகர் சூர்யாவின் உடன் பிறந்த தம்பி கார்த்தி நடிக்கும் படத்தின் ஷுட்டிங்கில் ஒரு துணை நடிகை கற்பழிக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாண்டிச்சேரி பூமியான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மஹாலிங்கம். இவரது மனைவி பத்மப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் துணை நடிகையாவார்.

டைரக்டர் சங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்க ஜெய்பீம் புகழ் சூர்யாவின் தம்பி கார்த்தி கதாநாயகனாக நடிக்க முத்தையா என்பவர் இயங்கிக்கொண்டிருக்கும் திரைப்படமான விருமன் ( Viruman ) பட ஷூட்டிங் தேனியில் நடைபெற்றுவருகிறது.

கடந்த 16 டிசம்பர் அன்று தேனியில் நடந்த இந்த சூட்டிங்கில் துணை நடிகை பத்ம ப்ரியாவும் கலந்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது. அங்கு உள்ள பிரபலமான நட்சத்திர விடுதியான ABM விடுதியில் படக்குழுவினர் மொத்தமாக வாடகை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது படக்குழுவை சேர்ந்த சிலர் துணை நடிகை பத்மப்ரியாவின் அறைக்கு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

---- Advertisement ----

இந்த செய்தி அடங்கிய ஒரு பத்திரிக்கையின் பக்கம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. உண்மைக்கதை என்கிற பெயரில் காழ்புணர்ச்சியுடன், வேண்டுமென்றே திரித்து கதை சொல்லும் ஜெய்பீம் சூரியா தனது தம்பியை இந்த விவகாரத்தில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு நீதி வாங்கி கொடுப்பாரா..?

கடந்த ஆட்சியில் தினம்தோறும் பொங்கி சமூக கருத்துக்களை கூறிவந்த ஜோதிகா தனது மைத்துனர் விவகாரத்தில் அமைதி காப்பாரா..? இல்லை ஆக்சனில் இறங்குவாரா எனவும் தேனி மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

---- Advertisement ----