குழந்தை இருக்குன்னு தெரிஞ்சும் இதை கேட்டாங்க.. Vj மகேஸ்வரி கண்ணீர்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் தான் விஜே மகேஸ்வரி இவர் மகேஸ்வரி சாணக்கியன் என்ற பெயரைக் கொண்டிருக்கிறார்.

முன்னணி தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து கொண்டே கிடைக்கும் வாய்ப்புகளில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து நடிகையாகவும் தென்பட்டு வருகிறார் .

VJ மகேஸ்வரி:

இவர் குறிப்பாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் புதுக்கவிதையில் காவியாவாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதனிடையே அசத்தப்போவது யாரு , தாயுமானவன் ,நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணவோம், இசையருவி ,அதிஷ்டலட்சுமி, நகைச்சுவை கில்லாடிகள், பெட்டா ராப் , அம்மன் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இவர் பணியாற்றி இருக்கிறார்.

---- Advertisement ----

இதனிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க 6வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமும் அடைந்தார்.

அதன் பின்னர் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாசில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பிஜே மகேஸ்வரிக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

திரைப்பட நடிகையாக VJ மகேஸ்வரி;

மந்திரப்புன்னகை, சென்னை 28 2 , பியார் பிரேமா காதல், விஷமக்காரன் , விக்ரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .

குறிப்பாக கமலஹாசன் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படமான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக பிஜே மகேஸ்வரி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து விஜேவாகவும், நடிகையாகவும் இருந்து வரும் பிஜே மகேஸ்வரி கடந்த 2005 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட இளம் வயதாக இருக்கும்போதே சாணக்கியன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

கணவருடன் விவாகரத்து:

இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். இதனிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜே மகேஸ்வரி தனது கணவரை கடந்த 2010 ஆம் ஆண்டு பிரிந்து விவாகரத்து செய்துவிட்டார் .

அதை எடுத்து தற்போது தனிமையில் தான் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டே நடிகையாகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அதன் மூலம் கணிசமான வரும் வருமானத்தை வைத்து சிங்கள் மதராக தனது குடும்பத்தை நடத்தி வருகிறார் .

இதனிடையே விஜே மகேஸ்வரி ஆடை வடிக்கைப்பாளாராவும் கூட இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் தனது அழகழகான புகைப்படங்களையும் கொஞ்சம் கவர்ச்சியான புகைப்படங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

மேலும் சிங்கிள் மதராக தான் தன்னுடைய பிள்ளையை எவ்வாறு பார்த்துக் கொள்கிறேன் தனது கணவரை ஏன் பிரிந்தேன் அவர் என்னவெல்லாம் டார்ச்சர் கொடுத்தார் என்பது குறித்து பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

குழந்தை இருக்கும்போதே படுக்க அழைத்தார்கள்:

இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா துறையில் தான் அறிமுகம் ஆகும்போது. அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை அனுபவித்தது குறித்து கண்ணீருடன் பேசி இருக்கிறார் .

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, குழந்தை இருக்கு என தெரிந்தும் பட வாய்ப்புக்காக சிலர் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு இருக்கிறார்கள்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால், இதை எல்லாம் தாண்டி தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என பேசியிருக்கிறார் விஜே மகேஸ்வரி.

---- Advertisement ----