கிளாமர் காட்டுறதுக்கு இது தான் காரணம்.. விஜே மகேஸ்வரி சொல்வதை கேட்டீங்களா..?

சன் மியூசிக் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆரம்ப நாட்களில் தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட விஜே மகேஸ்வரி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

சன் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் சின்னத்திரையோடு நின்று விடாமல் பெரிய திரையிலும் நடித்துக் கலக்கியவர்.

விஜே மகேஸ்வரி..

தமிழ் திரை உலகில் விஜே மகேஸ்வரி சென்னை 600028 இரண்டாம் பாகம், பியர் பிரேமா காதல், ரைடர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் ஆறில் கலந்து கொண்டவர். இதனை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

---- Advertisement ----

எதையும் ஸ்போட்டிவாக எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் மனதில் பட்டதை தைரியமாக சொல்லக் கூடிய இவரை பற்றி கலவை ரீதியான விமர்சனங்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது ஏற்பட்டது.

கிளாமர் காட்டுவதற்கு இதுதான் காரணம்..

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு அந்த புகைப்படங்கள் காட்டு தீ போல பரவி இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் என்று ஏங்க வைக்க கூடிய அளவு ரசிகர்களின் நிலைமை மாறிவிட்டது.

இந்த சூழ்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் இவரிடம் instagram பக்கத்தில் ஏன் கூடுதல் கிளாமர் நிறைந்த புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்கள் என்ற கேள்வி வைக்கப்பட்டது. அந்த கேள்விக்கு தயங்காமல் பதிலை அளித்திருக்கிறார்.

அதிர்ந்து போன ரசிகர்கள்..

இதனை அடுத்து அவர் என்ன பதில் சொல்லி இருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். அவர் அளித்த பதிலில் அனைவரது வீட்டிலும் ஒரு பெண்ணாக இருப்பதால் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையோ என்ற கருத்தை கூறி இருக்கிறார்.

அவருக்கு சிறு வயது முதற்கொண்டு வண்ண வண்ண உடைகளை அணிய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் நயன்தாரா, திரிஷா போல உடைகளை அணிந்து நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதின் காரணத்தால் தற்போது அது போன்ற உடைகளை அணிவதாகவும் கூறி இருக்கிறார்.

மேலும் தனக்கு ஒரு பையன் இருப்பதால் அந்தப் பையனை சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அதீத பொறுப்பு இருப்பதாலும் அதனையும் கவனத்தில் வைத்துக் கொண்டு தான் இது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக சொல்லி இருக்கிறார்.

ஒரு வேளை என்னையும் அவர்களில் ஒருவராக நினைத்ததை அடித்து இது போன்ற கிளாமர் புகைப்படங்களை பார்த்து அவர்களுக்கு வேறு மாதிரியான எண்ணங்கள் ஏற்படுகிறதோ? என்னவோ? தெரியவில்லை என்பதையும் சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இந்த விஷயத்தை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் அவர்கள் கூறியதில் உண்மை உள்ளது என்று விஜே மகேஸ்வரிக்கு ஆதரவாக பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்கள். இதனை அடுத்து மேலும் சில புகைப்படங்களை அத்திரிபுத்திரியாக இவர் வெளியிடலாம் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

---- Advertisement ----