அடியாத்தே..! திருமணதிற்கு முன்பே வரலட்சுமிக்கு வருங்கால கணவர் செய்ததை பாருங்க..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மூத்த மனைவியின் மகள் நடிகை வரலட்சுமி தனது அற்புத நடிப்பால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தவர்.


தமிழில் எதிர் பார்த்த அளவு பட வாய்ப்பு கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்தில் கடை விரித்த இவர் பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

நடிகை வரலட்சுமி..

தற்போது 38 வயதை எட்டி இருக்கும் நடிகை வரலட்சுமி மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இவரது நிச்சயதார்த்தம் பெரியவர்களின் முன்னிலையில் அண்மையில் நடைபெற்றது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்த சூழ்நிலையில் தனது வருங்கால கணவரைப் பற்றிய சில விஷயங்கள் இணையங்களில் ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை உண்டு பண்ணி உள்ளது.

---- Advertisement ----


போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான நடிகை வரலட்சுமி விக்கி இயக்கிய அந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சை தராத நிலையில் இவரது கேரக்டர் ரசிகர்களை ஈர்த்தது.

மேலும் பாலா இயக்கத்தில் வெளி வந்த தாரை தப்பட்டை படத்தில் இவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டு பாராட்டுகளை பெற்றது. எனவே தமிழில் இவர் கடைசியாக மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் என்ற படத்தில் நடித்த தெலுங்கில் பிஸியாகிவிட்டார்.

திருமணத்திற்கு முன்பே..

திரைப்படங்களில் நடித்து வரும் போதே இவர் விஷாலோடு கிசுகிசுக்கப்பட்ட நிலையில் நிக்கோலாயோடு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் அந்த கிசுகிசுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் இவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்து ட்ரெண்டிங் ஆனது.

விரைவில் நிக்கோலாயை திருமணம் செய்து கொள்ள போகும் வரலட்சுமி அடிக்கடி தனது வருங்கால கணவருடன் வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இணையத்தில் தற்போது இவர்கள் பற்றி ஒரு முக்கிய விஷயம் வெளி வந்துள்ளது. அதில் மும்பையில் வரலட்சுமிக்கு நிக்கோலாய் மொத்தம் இரண்டு பங்களாக்களை வாங்கிக் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

வருங்கால கணவர் செய்ததை பாருங்க..

இந்த பங்களாவில் பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளது. என்றும் அதன் விலை பல கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என தெரிகிறது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்டு தான் ரசிகர்கள் அனைவரும் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பதோடு திருமணத்திற்கு முன்பாகவே நிக்கோலாய் வரலட்சுமி மீது இவ்வளவு காதலாக இருக்கிறாரே என்று ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு இரண்டாம் தரமாக போகும் வரலட்சுமி நிக்கோலாய் உள்ளங்கையில் வைத்து தாங்குவார் போல் உள்ளது என்று ரசிகர்கள் பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை முன் வைத்து வருகிறார்கள்.


இன்னும் சில ரசிகர்களும் இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் திருமணத்துக்கு பிறகும் வரலட்சுமி நடிப்பை தொடர்வாரா? என்பது போன்ற கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

இதற்கான விடை இவர்கள் திருமணம் முடிந்த பிறகு விரைவில் தெரிய வரும் என சொல்லலாம். இதற்குரிய பதிலை கண்டிப்பாக வரலட்சுமி சொல்லுவார் என்ற ஆவலில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

அத்தோடு ரசிகர்கள் அனைவரும் அடியாத்தே திருமணத்திற்கு முன்பே வரலட்சுமிக்கு வருங்கால கணவர் கொடுத்த ஜாக்பாட் கிப்ட்டை பற்றி நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.

---- Advertisement ----