இதனால் தான் கல்யாணமே பண்ணிக்கல.. நடிகை ஸ்ருதிராஜ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

ஸ்ருதிராஜ்,(Sruthi Raj)தமிழ் டிவி சீரியல்களில் நடித்து, ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானஒரு நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழி சீரியல்களிலும் இவர் நடித்து வருகிறார். இவர் சினிமாவிலும் நடித்திருக்கிறார்.

மாண்புமிகு மாணவன், இனியெல்லாம் சுகமே, காதல்.காம், ஜெர்ரி போன்ற படங்களில், ஸ்ருதிராஜ் நடித்திருக்கிறார். எனினும் டிவி சீரியல்கள்தான் இவரை அதிகளவில் பிரபலமாக்கியது. அதனால், சீரியல் நடிகையாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

கோலங்கள், தென்றல், ஆபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு போன்ற சீரியல்களில் நடித்து, இவர் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகையாக வலம் வருகிறார்.

ஸ்ருதிராஜ்
Sruthi Raj

கடந்த 1995ம் ஆண்டில், மலையாளத்தில் ‘ அக்ராஜன்’ என்ற படத்தில் ஜான்சி என்ற துணை கதாபாத்திரத்தில் ஸ்ருதிராஜ் சினிமாவுக்கு அறிமுகமானவர். 1998ம் ஆண்டில், கன்னடத்தில் அந்தமான் என்ற படத்தில், சிவராஜ் குமாருக்கு ஜோடியாக நடித்து, அறிமுகமானார். மம்முட்டி -குஷ்பு நடித்த எலவம்கோடு தேசம் என்ற மலையாள படத்திலும், நந்தினி என்ற கேரக்டரில் ஸ்ருதிராஜ் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஸ்ருதிராஜ்
Sruthi Raj

மலையாளத்தில் உதயபுரம் சுல்தான், பிரியம், வருவாயா, தோஸ்த் படங்களிலும் ஸ்ருதிராஜ் நடித்திருக்கிறார். கடந்த 2001ம் ஆண்டில், விதேக்கடி மொகுடண்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்து, தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.

---- Advertisement ----

சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்தும் ஸ்ருதிராஜ், ஒரு முன்னிலை கதாநாயகியாக, அவருக்கான இடத்தை பிடிக்க முடியவில்லை. அதனால், ஒரு கட்டத்துக்கு பிறகு சீரியல் நடிகையாக மாறினார். அதுவும் ‘தென்றல்’ சீரியல், ஸ்ருதிக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தந்தது. டிவி சீரியல்களில், அதிக முக்கியத்துவம் பெற்ற சீரியலாகவும், அதிலும் கதாநாயகியாக நடித்த ஸ்ருதி ராஜ்க்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

ஸ்ருதிராஜ்
Sruthi Raj

இந்த சீரியலுக்கு நிறைய விருதுகளும் கிடைத்தது. இதனால், சினிமா நடிகைக்கு கிடைக்கும் ஒரு வரவேற்பும், இமேஜூம், ஸ்ருதிராஜ்க்கு கிடைத்தது என்பதை மறுக்க முடியாது.ஆனால், சீரியலில் முன்னணி நடிகையாக இருந்தும், வயது 40 களை கடந்து, இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் ஸ்ருதிராஜ்.

சீரியல்களில் நடித்து, நடித்து அதில் வரும் மோசமான கணவன் கேரக்டர்களை பார்த்து, பார்த்து திருமண வாழ்க்கையை ஸ்ருதி, வெறுத்துப்போய் விட்டாரா என, ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது.இந்நிலையில், சமீபத்தில் தனது திருமணம் குறித்து, தனது மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறி இருக்கிறார் ஸ்ருதிராஜ்.‘

என் வாழ்க்கையில் இதுவரை, நான் எதையும் திட்டமிட்டு செய்தது இல்லை. அப்படி திட்டமிட்டு செய்தாலும், அது அப்படி சரியாக நடப்பது இல்லை. அதனால், எனது திருமணம் குறித்து, நான் பெரியதாக எதுவும் யோசிக்கவில்லை, அதைப்பற்றி எந்த ஒரு முடிவும் நான் எடுக்கவில்லை. என் திருமணத்தை, என் வீட்டில் உள்ள குடும்பத்தில் பார்த்துக்கொள்வார்கள் என்று, திருமணம் குறித்த எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறேன், என்று ஸ்ருதிராஜ் கூறி இருக்கிறார்.

ஸ்ருதிராஜ்
Sruthi Raj

வயது, 40 களை கடந்துவிட்ட நிலையில், இனிமேல் அதுபற்றி கவலைப்பட எதுவுமில்லை என்ற முடிவுக்கு ஸ்ருதி வந்துவிட்டார் போலிருக்கிறது. சின்னதம்பி படத்தில், கண் பார்வை தெரியாத கவுண்டமணி, ‘லைட் இனி எரிஞ்சா என்ன, எரியாட்டி என்ன?’ என, விரக்தியாக கூறுவார். அதுபோன்ற மனநிலைக்கு மாறிவிட்டாரோ என, ஸ்ருதிராஜ் ரசிகர்கள் வருத்தமாக கூறி வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்,

---- Advertisement ----