இதனால் தான் நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. அதிர்ச்சி காரணத்தை கூறிய நடிகை கௌசல்யா..!

இதனால்தான் நான் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று நடிகை கவுசல்யா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் நடிகை கௌசல்யா.

நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அதே நடிகர் விஜய்க்கு அன்னையாகவும் நடித்த ஒரு நடிகை என்றால் அது கௌசல்யா தான் பிரியமுடன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை கௌசல்யா.

அதனை தொடர்ந்து திருமலை திரைப்படத்தில் அண்ணியாக நடித்திருந்தார் இவர் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மலையாளம் என்றாலும் இவரை ஓஹோ என வளர்த்துவிட்டது தமிழ் சினிமா தான்.

காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக கௌசல்யா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான இதனால் தன்னுடைய உண்மையான பெயரான கவிதா என்பதை கௌசல்யா என்று மாற்றிக் கொண்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கும் இவர் 40 வயதை தாண்டிய பிறகும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார்.

---- Advertisement ----

இதுகுறித்து அவர் கூறியதாவது, திருமணம் செய்துகொண்டு கணவன் குழந்தை என ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ என்னால் முடியாது. எனவே நான் திருமணம் செய்து கொள்ளவில்லை தற்போது சுதந்திரமாக வாழ்ந்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை கௌசல்யா.

கௌசல்யாவின் இந்த பதில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது, மற்றும் இவருடைய இந்த பதிலை பலரும் விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.

திருமணம் செய்துகொண்டால் சுதந்திரம் பறிபோய்விடும் என்று உங்களிடம் கூறியது யார் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா..? என்று பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படி உங்களை போல் அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த உலகமே அழிந்து விடுமே என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----