Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

இறக்கப்போகும் சமயத்தில் ஸ்ரீவித்யா கமலை மட்டும் அதற்கு அனுமதித்தார் ஏன் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக கொடி கட்டி பறந்தவர் தான் ஸ்ரீவித்யா. 1970 மற்றும் 80களில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

90ஸ் காலகட்டத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார் 2000 கால கட்டத்தில் குணச்சித்திர நடிகர் பல படங்களில் நடித்திருந்தார்.

நடிகை ஸ்ரீ வித்யா:

கேரள மாநிலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவரான ஸ்ரீவித்யா. பல்வேறு மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல படங்களில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நடித்து வந்த இவர் இதுவரைக்கும் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

--Advertisement--

அதில் பெரும்பாலும் இவர் மலையாள படங்களில் தான் அதிகம் நடித்திருக்கிறார். திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி படங்களுக்கு பின்னணி பாடகி ஆகும் ஒரு சில படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனழுடன் இணைந்து 1966 ஆம் ஆண்டு வெளிவந்த திருவருட்செல்வர் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீவித்யா தனது வாழ்க்கையை தொடங்கினார்.

பிறகு பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார் ஸ்ரீதிவ்யா.

கமல் ஹாசனுடன் ரகசிய காதல்:

ஸ்ரீ வித்யா கமல்ஹாசனுடன் அபூர்வராகங்கள் படத்தில் ஜோடியாக இணைந்து நடித்திருந்தார். படத்தில் நடித்த போதுதான் தன்னைவிட வயதில் குறைந்தவரான கமல்ஹாசனை ஒருதலையாக காதலித்தார்.

பின்னர் இவர்கள் இருவருமே காதலித்து வந்தனர். ஆனால் வெளியில் இருவரும் சொல்லிக் கொண்டதில்லை. அவர் மலையாள திரைப்படத்தின் உதவி இயக்குனரான ஜான்ஸ் தாமஸ் என்பவரை காதலித்து 1976 திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மட்டும் ஈடுபட்டு இல்லத்தரசியாக அமைதியான குடும்ப பெண்ணாக வாழ நினைத்தார் ஸ்ரீ வித்யா.

ஆனால் அவரது கணவரோ அதற்கு வழி விடாமல் அவரை தொடர்ந்து கட்டாயப்படுத்தி திரைப்படங்களில் நடிக்க வைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஊதாரித்தனம் செய்து வந்தார்.

சொத்துக்களை அபகரித்த கணவர்:

ஒரு கட்டத்தில் ஸ்ரீ வித்யாவின் சொத்துக்கள் மற்றும் பணங்களை பணங்களை அபகரித்து ஏமாற்றி விட்டார் அவரது கணவர்.

இதற்கு மேல் அவருடன் குடும்பம் நடத்த முடியாது என முடிவெடுத்த ஸ்ரீ திவ்யா 19. என்பதில் தனது கணவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

விவாகரத்துக்கு பின்னர் திரைப்படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்த ஸ்ரீ திவ்யா குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே அவர் தனது உடல்நிலை சரியில்லை என மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது அவருக்கு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர் கூற அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவரது தலை முடி உதிர்ந்து முகம் அலங்கோலமாகி உடல் எடை மெலிந்து மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார்.

கமலை மட்டும் அதற்கு அனுமதித்தது ஏன்:

அப்போது தனது கடைசி காலத்தில் இறக்கும் தருவாயில் யாரையுமே சந்திக்க ஸ்ரீ வித்யா விரும்பவே இல்லையாம்.

யாரேனும் பார்க்க வந்தால் கூட அவர்களை வரவேண்டாம் என அடாவடித்தனமாக கூறிவிடுவாராம். ஏனென்றால் தன் முகம் தன்னுடைய உடல் இவ்வளவு மோசமாகிவிட்டதை யாரும் பார்க்க கூடாது என விரும்பினார்.

ஆனால் அந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசனை மட்டும் பார்க்க அனுமதித்துள்ளார். காரணம் அவர் மீது ஸ்ரீ வித்யா தீராத காதலை வைத்திருந்தார் .

அந்த காதல் முடியாமலே முறிந்து போனது. தான் இறக்கும் கடைசி தருவாயில் கூட தன்னிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்தை தன்னுடைய உதவியாளர்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் ஸ்ரீ வித்யா.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top