“அந்த புள்ளையோட உன்ன பாத்தேன்… தொலைச்சிடுவேன்…” – மகனுக்கு தம்பி ராமையா எச்சரிக்கை ..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீரியலில் நடித்த ஆனந்த் பற்றி தெரியும். இவர் தற்போது சில படங்களில் நடித்து வருவதும் அறிந்ததே. மேலும் சில நாட்களுக்கு முன் கார் விபத்தில் மாட்டிக்கொண்டு அந்த விபத்தில் இருந்து தற்போது தான் மீண்டு வந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதை அடுத்து இவர் மீது பல புகார்களை கூறியிருக்கிறார் தம்பி ராமையா.

 தம்பி ராமையா தமிழ் தெலுங்கு மற்றும் பல படங்களில்  குணசித்திர நாயகனாக நடித்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்துமே இவரது நடிப்புக்கு சிறந்த உதாரணமாக விளங்கியது.மேலும் இவருக்கு ஒரு மகன் இருக்கிறார் அவர் பெயர் உமாபதி.

இவரும் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவான சர்வைவர் தொடரில் பங்கேற்று மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றார்.

 இதனைத்தொடர்ந்து உமா பதியும் நடிகை யாஷிகா ஆனந்தும் அடிக்கடி தனியாக சந்தித்துக் கொள்கிறார்களாம். இவர்களுக்குள் காதல் உள்ளது என்று கூறுகிறார்கள். அடிக்கடி இவர்கள் டேட்டிங் செய்வதாக பரவலாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருப்பதால் தம்பிராமையா ஏகப்பட்ட டென்ஷனில் இருக்கிறார்.

 இதை அடுத்து இவர் பொம்பள புள்ளைய சரியா வளக்க தெரியல இப்படியே வளக்கறது… என்பது போன்ற கேள்விகளை யாஷிகாவின் பெற்றோர்களை நோக்கி வைத்திருப்பதோடு  இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் சந்தித்துக் கொள்ளும் இவர்களை எப்படி தடுப்பது என்பது பற்றி எண்ணி மிகவும் கடுப்பில் இருக்கிறார்.

---- Advertisement ----

 இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் தலையை பிய்த்து கொண்டிருக்கும்  தம்பி ராமையா தன் மகனை கண்ட்ரோல் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். தன் மகனை தானே கண்ட்ரோல் செய்ய முடியாத இவர் எப்படி யாஷிகா ஆனந்த் திட்ட முடியும் முதலில் வேலி பயிரை மேயாமல் இருப்பதற்கு அணை போட வேண்டும். அதை விடுத்து இப்படி புலம்பி என்ன பயன்.

எனவே தன் மகனின் நிலையை உணர்ந்து விரைவில் கால்கட்டு போட்டு ஒன்று காதலுக்கு தடை போடலாம். இல்லையென்றால் காதலிக்கும் அந்த ஜோடிகளை சேர்த்து வைத்து ஆசீர்வாதம் செய்யலாம் இதில் ஏதாவது ஒரு முடிவைக் கண்டிப்பாக தம்பி ராமையா எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

---- Advertisement ----