வேறு நபருடன் படுக்கையை பகிர்ந்த 45 வயது பெண்..! - கணவன் செய்த வெறிச்செயல்..! கிருஷ்ணகிரியில் பயங்கரம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்து உள்ள கேட்டநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது50) விவசாயியான இவரது மனைவி காமாட்சி (45). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் காமாட்சிக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரவி தனது மனைவியிடம் கேட்டு அவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

நேற்று கணவன் - மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் நடந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி நேற்று இரவு தனது மனைவியை கொடுவாளால் வெட்டி கொலை செய்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து காமாட்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மனைவியை கொலை செய்து விட்டு சிங்காரப் பேட்டை போலீசில் ரவி சரண் அடைந்தார். அப்போது போலீசாரிடம் எனது மனைவி காமாட்சி வேறு ஒருவருடன் கள்ளதொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் கொடுவாளால் வெட்டி கொலை செய்தேன் என கூறினார். இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனே சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காமாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதலில் ஈடுபட்டதால் கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Previous Post Next Post
--Advertisement--