இலங்கையை சேர்ந்த எழுத்தாளர் வி.ஐ.எஸ்.ஜெயபாலன். ஆடுகளம் படத்தில்
வில்லனாக அறிமுகமான அவர் அதன் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்.
முதன் முறையாக நளினகாந்தி என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் கஸ்தூரி, புவிஷா, ஷர்மிளா உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூட் ஆரோகணம் இசை அமைத்துள்ளார்.
அமெரிக்கா வாழ் தமிழர் பொன் சுகீர் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:
ஜெயபாலன் ஒரு பிரபல மருத்துவர். ஒரு நாள் அவருக்கே உடல் நலமின்றி படுத்த படுக்கையில் கிடக்க வேண்டிய நிலை. அவரை கவனிக்க ஒரு நர்ஸ் வருகிறார். இவர்கள் இருவருக்குமான உறவின் மூலமாக இந்த சமூகத்தில் நிலவும் சில பிரச்சினைகளை பேசுகிற படம். இது அமெரிக்காவில் வெளிவரும் ஆங்கில படங்களின் பாணியிலான சைக்காலஜிக்கல் டிராமா வகை படம். புதுமையான திரைக்கதை, வசனம் கொண்டதாக இருக்கும் என்றார்.
இந்த படத்தில் புதுமுக நடிகை ஒருவர் ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு வயது 24 என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முறையாக நளினகாந்தி என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் கஸ்தூரி, புவிஷா, ஷர்மிளா உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூட் ஆரோகணம் இசை அமைத்துள்ளார்.
அமெரிக்கா வாழ் தமிழர் பொன் சுகீர் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:
ஜெயபாலன் ஒரு பிரபல மருத்துவர். ஒரு நாள் அவருக்கே உடல் நலமின்றி படுத்த படுக்கையில் கிடக்க வேண்டிய நிலை. அவரை கவனிக்க ஒரு நர்ஸ் வருகிறார். இவர்கள் இருவருக்குமான உறவின் மூலமாக இந்த சமூகத்தில் நிலவும் சில பிரச்சினைகளை பேசுகிற படம். இது அமெரிக்காவில் வெளிவரும் ஆங்கில படங்களின் பாணியிலான சைக்காலஜிக்கல் டிராமா வகை படம். புதுமையான திரைக்கதை, வசனம் கொண்டதாக இருக்கும் என்றார்.
இந்த படத்தில் புதுமுக நடிகை ஒருவர் ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு வயது 24 என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
Cinema