தூங்கிக்கொண்டிருந்த காதலியை கற்பழித்த காதலன் - இறுதியில் காதலி கொடுத்த தண்டனை..!


இங்கிலாந்து நாட்டின் நியூகேசில் நகரை சேர்ந்த இளம்பெண் ஜேட் பெய்லி ரீக்ஸ் என்பவர் பல்கலைகழகத்தில் படித்து வந்த பக்கத்து வீட்டுக்காரரான டேவிஸ் பேட்டன் என்பவரை காதலித்துள்ளார். 

இவர்கள் இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் உடல்நல குறைவு ஏற்பட்ட ஜேட் தனது வீட்டில் உள்ள அறையொன்றில் படுத்து தூங்கியுள்ளார். 

அங்கு வந்த பேட்டன் அவரது அனுமதியின்றி ஜேடை சீரழித்துள்ளார். தூங்கியெழுந்த ஜேட் தனது ஆடைகள் களையப்பட்டு இருந்தது அறிந்து அதிர்ந்துள்ளார். இதன்பின் பேட்டனிடம் பேசியதில் அவர் கற்பழித்தது ஜேடுக்கு தெரியவந்தது. 

ஆனால் அவர்கள் இருவரும் பேசிய தகவல்களை ஜேடின் போனில் இருந்து பேட்டன் அழித்து விட்டார். இதனால் பேட்டன் கற்பழித்துள்ளார் என்று ஜேடுக்கு உறுதியானது. ஆனால் இதனை பொலிசாரிடம் புகாராக தெரிவிக்க ஜேடுக்கு எவிடன்ஸ் இல்லை. 

அவற்றை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜேட் தனது மொபைல் போனை பேட்டனின் காரின் பின்னால் வைத்து விட்டு, அவரிடம் கற்பழித்த விவகாரம் பற்றி பேசியுள்ளார். இதில் அனைத்து உண்மைகளையும் பேட்டன் கூறியுள்ளார். அதனை ஜேட் ரகசிய பதிவு செய்து கொண்டார். 


 இந்த சான்றினை நியூகேசில் கிரவுன் நீதிமன்றத்தில் தெரிவித்து ஜேட் வழக்கு தொடர்ந்துள்ளார். விசாரணையில் பேட்டன் உண்மையை ஒப்பு கொண்டுள்ளார். தற்போது பேட்டனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை கிடைத்துள்ளது.
Previous Post Next Post