மங்கோலியாவைச் சேர்ந்த தம்பதி உடல் நலனுக்காக அணிலை பச்சையாக எடுத்துக் கொள்ளவே அது விபரீதத்தில் சென்று முடிந்துள்ளது.
மங்கோலியா நாட்டில் வசிக்கும் சிலர் அணிலை சமைக்காமல் பச்சையாக உண்டால் உடல் வலிமை பெறும், தோல் பளபளக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.
மங்கோலியா மற்றும் ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் சகானூர் எனும் சிறிய நகரம் உள்ளது.
இந்நகரத்தில் வசிக்கும் தம்பதி கடந்த வாரம், மர்மூத் எனும் ஒரு வகை அணிலை பிடித்து சமைக்காமல் அதன் கிட்னி, வயிற்றுப்பகுதி, பித்தப்பை ஆகியவற்றை உண்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லும்போது இருவருக்கும் பிளேக் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் இரண்டு தினங்களில் அந்த நபர் இறந்து விட்டார். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலன் இன்றி கடந்த மே 1ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் அதிர்ச்சியில் கண்ணீர் சிந்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


