வருடத்திற்கு ஆறு படங்கள் ரிலீஸ் செய்து கொண்டு பிஸியாக இருக்கும் அந்த வெற்றி ராஜா நடிகர் தற்போது உற்சாக பானத்தால் சினிமா வட்டரங்களிடம் வெறுப்பை சம்பாத்தித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ஒன்றின் ப்ரோமோஷன் நிகழ்சிக்காக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் இவரை பேட்டி எடுக்க பிரபல ரேடியோ நிறுவனம் ஒன்று அழைத்துள்ளது.
அதுவும் பகலில் தான். ஆனால், அருகில் கூட நெருங்க முடியாத அளவுக்கு உற்சாக பானத்தின் நெடி தொகுப்பாளரின் நாசிகளை நோகடிதுள்ளது. இதனால், கேட்க வந்த கேள்விகளை கேட்காமல் எதை எதையோ கேட்டு விட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு முன் கூட்டியே
பேட்டியை முடித்து விட்டு ஆளை கிளப்பி விட்டிருக்கிறது அந்த ரேடியோ சேனல்.
மக்கள் போற்றும் நடிகர் என்ற பெயரை எடுத்த இவர் இப்படி உற்சாக பானத்தை அருந்திவிட்டு அலைவது நல்லாவா இருக்கு என புழம்புகிரார்கள் அவரது நலம் விரும்பிகள். சினிமாவில் உச்சத்திற்கு சென்று பிறகு உற்சாக பானத்தால் உருக்குழைந்து போன நடிகர்களை நாம் பார்த்துள்ளோம்.
அந்த லிஸ்டில் இவரும் சேர்ந்து விட கூடாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்த பழக்கம் எல்லாம் இருக்க வேண்டியது தான். ஆனால், அதுவே பழக்கமாக இருக்க கூடாது. படங்களினால் கிடைத்த வெற்றியை போதையாக தலையில் ஏற்றிக்கொள்ளாத நடிகர் இவர். இப்போது, இப்படி உற்சாக பானத்தின் போதைக்கு அடிமையாக கிடப்பது அவலம்.