நடிகை சமீரா ரெட்டி வெறும் துணியை மட்டும் போர்த்திக் கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம்
படத்தில் நடித்து பிரபலமானார். அதைத்தொடர்ந்து வெடி, அசல், வேட்டை
உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மகாராஷ்டிராவை சேர்ந்த
அக்ஷய் வர்தே என்கிற தொழில் அதிபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம்
நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து
சமீரா இரண்டாவது முறையாகக் கர்ப்பமாகியிருப்பதாக அறிவித்தார். கர்ப்பமாக
இருக்கும் இவர் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியாகப் புகைப்படங்கள்
வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இந்த முறை ஆடை இல்லாமல் வெறும் துணியை மட்டும் போர்த்திக்
கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தைத் தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள்
கர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்படியா உடை அணிவது? என்று கடுமையாகக்
கேள்வி எழுப்பி வருகின்றனர்.



