நடிகை நயன்தாரா "கொலையுதிர் காலம்" என்ற ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தின் நடித்துள்ளார். 'உன்னைப் போல் ஒருவன்', 'பில்லா 2' படங்களின் இயக்குநர் சக்ரி டோலட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த
படத்துக்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
வரும் வெள்ளிகிழமை வெளியாகவுள்ள இந்த படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த படத்தை பார்த்தேன். நல்ல
திரில்லர் திரைப்படமான இதனை பார்வையாளர்கள் ரசிப்பார்கள். திரில்லர்
படங்களின் வரிசையில் இந்த படமும் கவனம் பெறும்.
மேலும், நயன்தாரா உள்ளிட்ட
நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். தயாரிப்பாளர் தனது தயாரிப்பு மீது நல்ல கவனமும் அக்கறையும் கொண்டுள்ளார்.
தனிப்பட்ட முறையில் நமக்குள் கசப்பான தருணங்கள் இருந்தாலும் முடிவில் நல்ல
பேச்சுவார்த்தையினால் எல்லாம் சுமுகமாக முடிந்தது. நாம் எல்லாரும் ஒரே
துறையில் பணிபுரிகிறோம். நல்ல மற்றும் எண்ணங்கள் நம்மை சுற்றிலும்
இருக்கின்றன. கொலையுதிர்காலம் படம் நல்ல வசூல் செய்து வெற்றி பெற எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார் விகேன்ஷ் சிவன்.


