இன்றைய சூழவில் பலருக்கும் பல பிரச்சனைகள். அதில் பிரதானமான ஒரு பிரச்சனை என்றால் அது பணமாக தான் இருக்கும். மாசம் 20 ஆயிரம் சம்பாதிக்குறேன் கையில் காசு தங்கமாட்டேங்குது. மாசம் 50 ஆயிரம் சம்பாதிக்குறேன் கையில் காசு நிக்க மாட்டேங்குது என்பது தான் பலரது குழப்பமும்.
காசு வருது எங்கே போகு எப்படி போகுது என்றே தெரியவில்லை என்று பலரும் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். பின்வரும் சில வழிமுறைகளை பின் பற்றினால் விரைவில் அப்படியான புலம்பலில் இருந்து நாம் தப்பிக்கலாம்.
அத சொல்லுங்க மொதல்ல என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. சரி வாங்க பாக்கலாம். முதலில், பணத்திற்கு தர வேண்டிய மரியாதையை நீங்கள் தருகிறீர்களா..? என்பது யோசித்து பாருங்கள். பணத்தை எப்படி கையாள வேண்டுமோ அப்படிதான் கையாள வேண்டும். ஏனோ தானோ என்று கையாள கூடாது.
அது வெறும் கலர் பேப்பர் சார். மனுஷனுக்கு இல்லாத மரியாத அந்த பேப்பருக்கு என்ன சார் என்று வித்தாரம் பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது நண்பா.ஒருமனிதனை காட்டி மளிகை கடையில் ஒரு கிலோ அரிசி வாங்க முடியுமா நம்மால்...? முடியாது.
அதுவே அந்த கலர் பேப்பர் இருந்தால் அரிசி நம்மை வந்து சேரும். பணம் என்பது கலர் பேப்பர் அல்லது நம் அறிவையும், உடலையும் வைத்து உழைக்கும் அந்த உழைப்பின் மறு உருவம் என்பதை நீங்கள் ஆழ் மனதில் நன்கு புரிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.
பணத்தை பாதுக்காப்பாக வைத்துக்கொள்வது நம்முடைய பொறுப்பு என்றால் அதை விட முக்கியமானது அதை நாம் எப்படி கையாளுகிறோம் என்பது தான். வாங்க.. எப்படி பணத்தை கையாளுவது என்று பார்க்கலாம்.
உங்களது கைக்கு பணம் வருகின்றது. அது,சம்பளமாக இருக்கலாம் அல்லது நிலம், வீடு,வாகனம் அல்லது உங்கள தொழில் மூலம் வந்த வருமானமாக இருக்கலாம். எப்படியோ ஒரு விதத்தில் உங்களிடம் பணம் வந்துவிட்டது.
அதனை முதலில், உங்கள் பூஜை அறையில் உள்ள யங்கள் இஷ்ட தெய்வத்தின் புகைப்படத்தின் முன்போ அல்லது சிலையின் முன்போ வைக்க வேண்டும். பூஜை அறை இல்லை வீட்டில் ஒரு பகுதியில் சாமி படம் வைத்திருக்கிறோம் என்றால் அந்த படத்தின் முன்பு பணத்தை வைத்துவிட்டு மற்றவர்கள் கண் படாதபடி மஞ்சள் துணியோ அல்லது சிகப்பு நிற துணியோ கொண்டு மூடி வைத்து விடவேண்டும்.
சிறிது நேரம் கழித்து, அந்தபணத்தை பீரோவில் எடுத்து வையுங்கள் அதற்கு முன்பாக, பீரோ லாக்கரில் வேறு எந்த பொருளும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
வேறுஎந்த பொருளும் என்றால் எந்தவொரு பொருளும் தான். சிலர், வீட்டு பத்திரங்கள், ஜாதக குறிப்புகள், மருந்து டப்பாக்கள், இன்ன பிற சமாச்சாரங்கள், லொட்டு லொசுக்கு என கண்டதையும் லாக்கரில் போட்டு வைத்திருப்பார்கள். அப்படி எதுவும் லாக்கரில் இருக்க கூடாது.
லாக்கர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அதன் பிறகு, பணம் வைக்கும் இடத்தில் ஒரிஜினல் பட்டுத்துணி ஒன்றை வாங்கி விரித்து வையுங்கள் அதனை நீங்கள் வேறு எதற்கும் பயன்படுத்தி இருக்க கூடாது. பட்டுத்துணி இல்லை என்றால் பயன்படுத்தாத மஞ்சள் நிற துணியை விரித்து வைப்பது மிக சிறப்பு.
இப்போது அந்த பட்டுத்துணியின் மீதோ, மஞ்சள் துணியின் மீதோ அந்த பணத்தை வையுங்கள். பிறகு, லாக்கரை பூட்டி விடுங்கள். அடுத்து, அந்த பணத்தில் இருந்து முதலில் நீங்கள் வாங்க வேண்டியது "கல் உப்பு" ஆகும். அதன் பிறகு தான் எந்தவொரு செலவாக இருந்தாலும் செய்ய வேண்டும்.
அடுத்தபடியாக, பணத்தைபிறருக்கு கடனாக கொடுக்க நேர்ந்தாலோ.? அல்லது உதவி செய்ய நேர்ந்தாலோ..? அல்லது வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதாக இருந்தாலோ..? அல்லது வங்கிக்கணக்கில் போடுவதாக இருந்தாலோ அதற்கும் ஒரு விதிமுறை உள்ளது. அது என்ன என்று கேட்கிறீர்களா..?
பணத்தின் தலைப்பகுதி உங்களை நோக்கி இருக்கின்றதா என்பதைஉறுதி செய்து கொள்ளுங்கள். தலைப்பகுதி என்பது ரூபாய் தாளில் நான்கு முக சிங்கம் எந்தபக்கம் இருக்கின்றதோ அதுவே அந்த ரூபாய் நோட்டின் தலைப்பகுதி.
அந்த தலைப்பகுதி உங்களை நோக்கி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் கையை விட்டு பணம் போனாலே அப்போது தலைப்பகுதி உங்களை நோக்கி இருப்பது போன்று தான் இருக்க வேண்டும்.
அந்த தலைப்பகுதியை கட்டை விரல் கொண்டு நீங்கள் அழுத்தி பிடித்திருக்க வேண்டும்.
இதனை, பின் தொடர்ந்து பாருங்கள் உங்களிடம்பணம் புழக்கம் அதிகரிப்பதை உணருவீர்கள். எல்லாம், சரி என்னுடைய சம்பளம் பேங்க் அக்கவுண்டிற்கு தான் வருகின்றது வந்தவுடனே EMI, அது இதுன்னு செலவு ஆகிடுது. பல நேரம் அப்படியே ஆட்டோ டெபிட் ஆகிவிடின்றது இப்போது என்ன செய்வது என்று கேட்பவர்கள்.
முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் பணத்தை எடுத்து மேற்சொன்ன விதிகளை பின்பற்றி விட்டு மீண்டும் மேற்சொன்ன விதத்திலேயே வங்கியில் செலுத்திவிடுங்கள்.
ஆன்லைன்ல ட்ரான்ஸ்ஃபர் பண்ணும் போது, கூகுல் பே பண்ணும் போது, செக் கொடுக்கும் போது நான் என்ன பண்றது என நையாண்டி கேள்வி கேட்பவர்களுக்கும் பதில் இருக்கிறது. மேற்சொன்ன அனைத்தும், பணத்தை பணமாக கையாளும் போது செய்ய வேண்டியவை தானே தவிர மற்ற எதிலும் எதையும் பின்பற்ற தேவையில்லை. பாதுகாப்பான பரிவர்த்தனையை உறுதி செய்தாலே போதும்.
முக்கியமாக, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 24 மணி நேரமும் மற்ற நாட்களில் மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரையும் கடன் கொடுப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
இல்ல சார், பெரிய எமர்ஜன்சி-னு கேக்குறாங்க சார். எதோ ஹாஸ்பிடல் செலவாம் சார் கொடுத்தே ஆகணும் சார் என்ற நிலை வரும் போது பணத்தை அவர்களிடம் கொடுக்கும் முன்பு அவரிடம் இருந்து ஒரு பொருளையோ அல்லது சிறிய அளவிலான ரூபாய் நோட்டையோ வாங்கி கொண்டு பிறகு கொடுங்கள் தவறில்லை.
உதாரணமாக, நீங்கள் 500 ரூபாயோ அல்லது 50,000 ரூபாயோ அல்லது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் யாரிடம் கொடுக்கிறீர்களோ அவர்களிடாமிருந்து 5 ரூபாயோ அல்லது 10 ரூபாயோ அல்லது 50 ரூபாயோ வாங்கிக்கொண்டு அதன் பிறகு உங்கள் பணத்தை அவர்களிடம் கொடுங்கள்.
பின்பற்றி பாருங்கள்..உங்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
நன்றி,
எல்லாம் ஷிவம்