நேற்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதின. இப்போட்டியானது கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது.
இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ஜோனி பைர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.முதல் மூன்று ஓவர்களில் பொறுமையாக விளையாடிய இருவரும் பின்னர் தங்களது அதிரடி ஆட்டத்தை காட்டினார்.
இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ஜோனி பைர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.முதல் மூன்று ஓவர்களில் பொறுமையாக விளையாடிய இருவரும் பின்னர் தங்களது அதிரடி ஆட்டத்தை காட்டினார்.
இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பங்களாதேஷ் அணி பந்து வீச்சில் முகம்மது சைஃபுடின்,மெஹீடி ஹசன் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 387 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
தொடக்கம் முதலே பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தது பங்களாதேஷ். ஆனால், 48.5-ஆவது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் மட்டுமே சேர்த்தது பங்களாதேஷ்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்து வீரர் ARCHER பங்களாதேஷ் வீரர் SOUMYA-வை நோக்கி வீசிய ஒரு பந்து கிளீன் போல்டானது. ஆனால், போல்ட் செய்து விட்டு பவுண்டரி லைனை தாண்டி விழுந்தது அந்த பந்து. இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Have you ever seen a ball go for 'six' after hitting the stumps? 👀#WeAreEngland #CWC19 pic.twitter.com/nL2SToZ8iC— ICC (@ICC) June 8, 2019
Tags
World Cup 2019