அந்த மாதிரியான படங்களில் நடித்து இளசுகளிடம் பிரபலாமானவர் சன்னிலியோன். இந்த பிரபலத்தை வைத்து இந்திய சினிமாவிலும் நுழைந்து விட்டார்.
தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கூட வீரமாதேவி என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் ரோஹித் சௌகான் இயக்கத்தில் உருவான அர்ஜூன் பாட்டியாலா படத்தில் சன்னி
லியோன் ஒரு போன் நம்பரை கூறியுள்ளார்.
இதனை சன்னி லியோனுடைய போன் நம்பர் தான் என நினைத்து இளைஞர் ஒருவர் தொடர்ந்து 400 முறை போன் செய்துள்ளார். மறுமுனையில் போனை எடுத்த நபர் இது சன்னி லியோன் நம்பர் இல்லை என கூறியுள்ளார்.
ஆனால், பல இளைஞர்கள் இது சன்னி லியோனா..? என்று 400-க்கும் மேற்பட்டோர் அவரை தொடர்பு கொண்டு இரவு, பகல் என பாராமல் போன் செய்து கொண்டிருகிறார்கள். இதனால் வெறுப்பான அந்த வாலிபர் ஒரு கட்டத்தில் போலீசில் புகார் தெரிவித்து விட்டார். இதனால், தொடர்ந்து போன் செய்து தொந்தரவு கொடுத்த இளைஞர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர் போலீசார்.



