இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படம் தொடங்கியது - ஹீரோ இவர் தான்..!


தமிழ் சினிமாவில் உள்ளே தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். அவரின் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் செக்கச்சிவந்த வானம் வெளியானது. 

அடுத்ததாக பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கவுள்ளார்கள். 


இதற்கிடையில் அவர் லைகா நிறுவனத்துடன் இணைந்து வானம் கொட்டட்டும் படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிக்கிறார்கள். 


மேலும் படத்தில் சரத்குமார், ராதிகா, சாந்தனு ஆகியோரும் நடிக்க பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
------Advertisement------
------Advertisement------