வசூல் ராஜா படத்தில் இடம் பெற்ற சிறுக்கி சிரிச்சு வந்தா சீனா தானா டோய் என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார் நடிகை ரகசியா.
தொடர்ந்து பல படங்களில் ஐட்டம் நடிகையாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். அழகாக இருக்கும் இவரிடம் ஏன் நீங்கள் ஹீரோயின் ஆக முயற்சி செய்ய வில்லை என்றா கேட்டதற்கு, யார் சொன்னது..? நான் ஹீரோயினா நடிக்கல னு, நான் இங்கே அறிமுகம் ஆகுறதுக்கு முன்னாடி, ஹிந்தியில் 'பாம்பே டூ
கோவாங்கிற படத்துல ஒரு வெயிட்டான கேரக்டர்ல நடிச்சேன். அந்த படத்துல சனா
கான், ஐட்டம் ஸாங் பண்ணி இருந்தாங்க.
என்ன பண்றது, வாழ்க்கை ஒரு வட்டமாச்சே. இப்போ சனா கான் ஹீரோயின் ஆயிடாங்க. நான் ஐட்டம் டான்சர் ஆகிட்டேன். நான் ஒரு தடவை சென்னைக்கு ஒரு ஸ்டேஜ் ஷோவுக்கு வந்திருந்தேன்.
அப்போ சுந்தர்.சி என்னைப் பார்த்துட்டு, ஹீரோயினா நடிக்கிறியானு கேட்டார். அப்போ என் காலேஜ் படிப்பு முடியலை. ஸோ என்னால முடியாதுனு சொல்லிட்டேன். காலேஜ் முடிஞ்ச பிறகு, பாக்கெட் மணி கிடைக்குதே என்று தான் ஐட்டம் டான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
ஆனால், காலங்கள் மாறிவிட்டது. இப்போதெல்லாம் படத்தின் ஹீரோயின்களே கணிசமான தொகையை வாங்கிக்கொண்டு ஐட்டம் டான்ஸ் ஆடிவிடுகிறார்கள். ஒரு படத்திற்கு இரண்டு சம்பளம் வாங்குகிறார்கள். அதனால், ஐட்டம் டான்சர்களுக்கு வேலையில்லாமல் போய் விட்டது. போகிற போக்கை பார்த்தால், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கே வேலை இருக்குமா என்று தெரியவில்லை.ஏனென்றால், படத்தில் நடிக்கும் ஹீரோவே அனைத்தையும் செய்து விடுகிறார்.
இப்படி ஒட்டு மொத்த சினிமாவும் குறிப்பிட்டசில நடிகர்கள் கையில் சிக்கி இருக்கிறது. முன்பு இருந்ததை விட இப்போது போட்டி மிக அதிகம். இதுல எங்க என்னை மாதிரி ஆளுங்க பொழைக்க முடியும்.
அதனால், கிடக்கும் ஸ்டேஜ் சோக்களில் நடனம் ஆடிsசம்பாதித்து வருகிறேன். ஏழை குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சை செய்ய உதவும் வகையில் ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். நிம்மதியாக இருக்கிறேன் என்கிறார் ரகசியா.
இதோaஅவருடைய சமீபத்திய புகைப்படங்கள்,





