பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் முதல் சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஓவியா.
இவர் தனது குழந்தைத்தனமான செயலாலும் , வெளிப்படையான பேச்சாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். மேலும் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.
அதுமட்டுமின்றி ஓவியா ஆர்மி உருவாக்கப்பட்டு அதில் ஓவியாவிற்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. மேலும் பிக்பாஸ் முதல் சீசனில் வெற்றியாளர் ஆரவ். ஆனால் அவரைவிட புகழின் உச்சத்தை அடைந்தவர் நடிகை ஓவியா.
அதன் தொடர்ச்சியாக விளம்பரப்படங்கள், வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் என ஓவியா பெரும் பிரபலமடைந்துவிட்டார். அவர் படங்களில் நடிப்பதை விட வெளிநாடுகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் இதனால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஓவியா கூறியுள்ளார்.கடந்த வாரம் நடைபெற்ற SIIMA 2019 விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை ஓவியா சிகப்பு நிற புடவையில் வந்திருந்து ரசிகர்களை கவர்ந்தார். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Tags
Oviya