யாரால் ஏமாற்றப்பட்டேன் - நடிகை ஆன்டிரியா கொடுத்த க்ளூ - நடிகரை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்


தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளை கொண்ட நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. இவர் சமீபத்தில் பெங்களூரில் நடந்த கவிதை போட்டியில் கலந்து கொண்டு மிகவும் சோகமான கவிதை ஒன்றை கூறினார்.

இந்த கவிதைக்கு காரணம் தான் திருமணமான ஒருவருடன் தொடர்பு வைத்து கொண்டு மனதளவிலும் உடலளவிலும் ஏற்பட்ட பாதிப்பே காரணம் என அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். 


ஆனால் அந்த நபர் யார் என்பது பற்றி கூறவில்லை.இதனால் ரசிகர்கள் பலரும் அந்த நபர் யாராக இருக்கும் என கணக்கு போட தொடங்கினார்கள். இறுதியில் சிக்கியது பெரிய இடத்து வாரிசு நடிகர். 


அந்த நடிகர் தான் பலரும் யூகித்திருந்த வேலையில் நடிகை ஆண்டிரியாவே ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதற்கு "Hello Mr.Edirkatchi.." என தலைப்பு வைத்துள்ளார். 

பொதுவாக பாடலை பாடிய புகைப்படத்தை மட்டுமே பகிரும் ஆண்ட்ரியா இப்போது என்ன பாடல் பாடினேன் என்றும் கூறியுள்ளார் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கூறினாலும், "புரிந்து விட்டது" என சிரிப்பாய் சிரிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

இந்த விவகாரம் எங்க போய்முடியப்போகுதோ..? என்று தலையில் அடித்து கொள்கிறார்கள் வாரிசு-க்கு நெருங்கிய பிரபலங்கள். இதில் என்ன ஒரு ஸ்பெஷல் என்றால், தமிழில் பெரும்பாலான ஊடங்கங்கள் இந்த விவகாரத்தை பற்றி வாயே திறக்காமல் இருட்டடிப்பு செய்து வருகிறார்கள். இது மேலும், அந்த வாரிசு நடிகர் மீது சந்தேகத்தை எழுப்ப காரணமாக உள்ளது.

தமிழ் நாட்டுல 95% ஊடங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் தானே உள்ளது. இதெல்லாம் வெளியே வருமா என்ன..? என்று கிழித்து தொங்கவிடுகிறார்கள் நெட்டிசன்கள்.

Previous Post Next Post
--Advertisement--