சூப்பர் மார்க்கெட்டில் உருளைகிழங்கு கூடையில் சிறுநீர் கழித்து கையும் களவுமாக சிக்கிய இளம் பெண்..! - வைரலாகும் வீடியோ


அமெரிக்காவை சேர்ந்த பென்சில்வேனியா நகரில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட் ஒன்றில் உருளைக்கிழங்குகள் போடப்பட்டிருந்த டப்பா ஒன்றில் சிறுநீர் கழித்துவிட்டு சென்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


அந்த இளம்பெண்னின் பெயர் கிரேஸ் பிரவுன். இவர் அங்குள்ள வால்மார்ட் சூப்பர் மார்கெட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் நடந்து கொண்ட விதம் சற்றும் எவரும் எதிர்பார்க்காத ஒன்று. அந்த சூப்பர் மார்கெட்டில் வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு பாஸ்கட்டில் கிரேஸ் பிரவுன் சிறுநீர் கழித்த வீடியோ CCTV காமிராவில் பதிவாகியுள்ளது. 


இதனை கண்டுவிட்ட அங்காடி அலுவலர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்தப் பெண் தப்பி ஓடி விட்டார். அங்காடியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த சிசிடிவி காட்சிகளை இணையதளத்திலும் வெளியிட்டனர். 


இதனால் தனது குட்டு வெளிப்பட்டு விட்டதால் வேறு வழி இன்றி கிரேஸ் பிரவுன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். ஒரு சிலர் பொருள்களை திருடுவதற்காக அங்காடிகளுக்குள் நுழையும் நிலையில் கிரேஸ் பிரவுன் அங்காடிக்குள் நுழைந்த காரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் அவ்வாறு நடந்து கொண்டதற்கான குறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post
--Advertisement--