தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்க இளம் நடிகர் படாத பாடு பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு படத்திலும் வித்தியாச வித்தியாசமாக நடித்து ரசிகர்களை ஈர்க்க முயற்சி செய்கிறார்கள்.
அந்த வகையில்,நடிகர் ஜெயம் ரவி, ஜீவா, விஷ்ணு விஷால்,ஆர்யா, விக்ரம் பிரபு, கார்த்தி ஆகியோரை கூறலாம். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் கொடுத்து விடுகிறார்கள்.
அதிலும், வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்வு செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கென சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் வட்டம் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால், நடிகர் சிம்புவிற்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.
சிறுவயதில் இருந்து நடித்து வருகிறார். பன்முகத்திறமை உள்ளவர் என்பதால் அவருக்கு விஜய், அஜித்திற்கு அடுத்தபடியாக வெறித்தனமான ரசிகர்கள் வட்டம் உள்ளது. ஆனால், அவர்களை பெருமை படுத்தும் வேலைகளை சிம்பு செய்தாரா..? என்றால் இல்லை. தான் இப்படி செய்தால் தனது ரசிகன் என சொல்லிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு எவ்வளவு அசிங்கமாக இருக்கும் என சிம்பு எண்ணிப்பார்பதாக தெரியவில்லை.
படம் ஹிட், ப்ளாப் எனப்தெல்லாம் ரெண்டாவது பட்சம். ஆனால், படம் வரவேண்டுமில்லையா..? அதையெல்லாம் சிம்பு கண்டுகொள்வதே இல்லை. ஆனால், இவரது போட்டியாளரான நடிகர் தனுஷ் படம் ஹிட்டோ... ப்ளாப்போ.. வருடா வருடம் ஒரு படத்தை இறக்கி விடுகிறார்.
இந்நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க விருந்த மாநாடு படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், சிம்பு செய்த பிரச்சனை காரணமாக படத்தை ட்ராப் செய்துவிட்டோம் என தயாரிப்பாளர் அதிரடியாக கூறிவிட்டார்.
இதனால் மனமுடைந்த சிம்பு ரசிகர் ஒருவர் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
Tags
Simbhu