தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே இவருக்கு ரசிகர் உருவானார்கள். சமூக வளைத்தலங்களில் பல பக்கங்களை உருவாக்கி இவரை ரசித்தார்கள் ரசிகர்கள்.
பார்ப்பதற்கு பக்கத்துவீட்டு பெண் போல அழகு பதுமையாக இருக்கும் இவருக்கு பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகவிருந்த "காதல் to கல்யாணம்" சீரியலில் நடிக்க அழைப்பு வந்தது. அந்த தொடரின் மூலம் இவரது ரசிகர் வட்டம் விரிவடைந்தது.
தொடர்ந்து, சினிமாவிலும் ஹீரோயின் ஆனார். இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருகின்றன. இப்போது, இயக்குனர் ஷங்கரின் "இந்தியன் 2" படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் பரவி வந்தது.
இப்போது, இது உண்மை தான் என பிரியா பவானி ஷங்கரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தொலைகாட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து இப்போது பிரமாண்ட இயக்குனரின் படத்தில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ள இவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.