இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ப்ரியா ஆனந்த்..! - என்ன காரணம்..?


‘வாமனன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அதன் பிறகு இவர் புகைப்படம் ,இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் ,வணக்கம் சென்னை ,அரிமா நம்பி, இரும்புக்குதிரை ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

ஆனால் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் எல்.கே.ஜி. இத்திரைப்படம் அரசியலை மையமாகக் கொண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 


இவர் துருவ விக்ரம் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘ஆதித்யா வர்மா’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.மேலும், அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் உருவாகி வரும் "சுமோ" படத்தில் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார். 


கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் இருந்தும் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார் ப்ரியா ஆனந்த். இந்நிலையில், தான் அடுத்து நடிக்கவுள்ள தெலுங்கு படம் ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி நடிக்கவுள்ளாராம். 

படத்தின் கதை மீது உள்ள அதீத நம்பிக்கையே இந்த முடிவுக்கு காரணம் என்று கூறுகிறார்கள். இந்த படம் வெளியானால் தெலுங்கில் ஒரு ரவுன்ட் வரமுடியும் என நம்புகிறார் அம்மணி. 
Previous Post Next Post
--Advertisement--