பிக்பாஸ் : வெளியேற்றப்பட்ட அபிராமி முதன் முதலாக செய்த பதிவை பார்த்தீர்களா.?


100 நாட்கள் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி 55 நாட்களை கடந்துவிட்டது. தொடக்கத்தில், 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

இரண்டாவது வார இறுதியில் முதல் நபராக பாத்திமா பாபு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி அகர்வால் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 


கடந்த வாரம் வைல்ட் காட் மூலமாக பிக்பாஸ் வீட்டிற்குள் 17-வது போட்டியாளராக நடிகை கஸ்தூரி என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லவில்லை என்பதால் வனிதா விஜயகுமாரரை, மீண்டும் இறக்கியது பிக்பாஸ். 


பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வருகை பரபரப்பை ஏற்படுத்தி போர்களமாக மாற்றியது. மேலும், வனிதா வந்த பின்பு நடந்த களேபரங்கள் போட்டியாளர் மதுமிதாவை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார். 

இந்நிலையில் இந்த வாரம் அபிராமி குறைவான வாக்குகளை பெற்றுள்ளதால் வெளியேற்றப்பட்டுள்ளார்.வெளியே வந்த அவர் "வந்துவிட்டேன் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக நேர்கொண்ட பார்வையுடன் " என்று ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.


Previous Post Next Post
--Advertisement--