சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி வந்த குறும்பட நடிகை ஒருவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியும் கிடைக்காததால் விரக்தி ஏற்பட்டு அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் கூறியுள்ளார்கள்.
ஆனால், இது குறித்த விரிவான விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் ஓஷிவரா பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 23 வயதே ஆன இந்த நடிகையின் பெயர் "பியர்ல் பஞ்சாபி" ஆகும். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வந்தார்.
நீண்ட நாட்களாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் மன ரீதியில் பாதிப்பு அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது எரிச்சல் அடையும் பியர்ல், தனது தாயாருடன் வாக்குவாதம் செய்து வந்ததாக தெரிகிறது. ஏற்கனவே அவர் 2 முறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால், அப்போது அருகில் ஆட்கள் இருந்ததால் அவர் காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில், மூன்றாவது முறையாக தனது அபார்ட்மென்ட்டில் உள்ளவ 3-வது மாடியில் இருந்து குதித்து நடிகை பியர்ல் பஞ்சாபி சம்பவ இடத்திலேயே உயிரை விட்டுள்ளார்.
வீட்டில் எல்லோரும் தூங்கி விட்ட நிலையில் நள்ளிரவு சுமார் 12.15-க்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா வாய்ப்புகள் கிடைக்காததே அவரது தற்கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது.
Tags
Pearl Panjabi