பிகில் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அப்படியிருக்க பிகில் படம் என்னுடையது என ஒரு உதவி இயக்குனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளிவந்ததாகவும், அதில் அவர் கொடுத்த வழக்கை தள்ளுப்படி செய்து, இனி இப்படி ஒரு வேலையை செய்யக்கூடாது என கண்டித்ததாகவும் படக்குழு தரப்பில் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டது.
ஆனால், உண்மையில் அந்த உதவி இயக்குனர் கூறுகையில் ‘நீண்ட நாட்களாக இந்த வழக்கு நீடித்துக்கொண்டே வருகின்றது. அதனால், வழக்கை ஐகோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து நான் தான் வாபஸ் பெற்றேன்.
அதை படக்குழு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. இவர்களிடம் நீதிபதியே என்னமோ அவர்கள் கொடுத்த வழக்கிற்காக டிஸ்மிஸ் செய்தது போல் பேசுகின்றனர். அது உண்மையில்லை. பிகில் கதை திருட்டு வழக்கில் அடுத்த வாரமே ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்போகிறேன்
என்று கூறியுள்ளார்.
Tags
Bigil Movie