பக்கத்துக்கு ஸ்டேட்டில் இருந்து வந்த மங்களகரமான மேனன் நடிகை சினிமா வாய்ப்புகள் எதுவும் இன்றி இருக்கிறார். அவர் நடித்து முடித்துள்ள ஒரே தமிழ் படமும் இப்போதைக்கு ரிலீசாகுற மாதிரி தெரியவில்லை.
இதனால் சொந்தமாக நடன பள்ளி நடத்தி அதன் மூலம் நிகழ்சிகளை செய்து வருகிறார். இவருக்கு சினிமா வாய்ப்புகள் வராமல் இருக்க அந்த தலைவர் நடிகர் தான் காரணம் என்கிறார்கள்.
அந்த தலைவர் நடிகரும், மங்களகர நடிகையுள் ஒரு படத்தில் சேர்ந்து நடித்த போது காதல் கிசுகிசு பரவியது. ஆனால், நடிகையோ தலைவரின் வயதையும், தன்னுடைய வயதையும் காரணம் காட்டி காதலை ஏற்க்க மறுத்து விட்டார்.
இதனால் கடுப்பான நடிகர் நடிகைக்கு செல்லும் வாய்புகள் அனைத்திற்கும் அணை கட்டி விட்டார். இந்நிலையில், நடிகையின் குடும்பத்தார் "இனி சினிமாவும் வேண்டாம். ஒன்னும் வேண்டாம் கல்யாணம் பண்ணிக்கோ" என பெற்றோர் கூறி வருகின்றனர்.
அதோடு, இப்போதே மாப்பிள்ளை தேடும் வேலைகளும் துவங்கி உள்ளன. விரைவில் நடிகை வீட்டில் கெட்டிமேள சத்தம் கேட்கும் என்கின்றனர்.அதே நேரம், தலைவர் நடிகரின் திருமணமும் நிச்சயதார்த்துடன் நின்று விட்டது. இதற்கும், மங்கள கரமான நடிகையின் திடீர் திருமண நடவடிக்கைக்கும் சம்பந்தம் இருக்குமோ..? என கற்பனை குதிரையை அவிழ்த்து விட்டுள்ளனர் கோலிவுட் வட்டாரங்கள்.
Tags
Gossip