கார் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய பிரபல இளம் நடிகர்..! - CCTV காட்சிகளால் சிக்கினார்..!


தெலுங்கானா பகுதியில் விபத்து ஏற்படுத்திவிட்டு பிரபல நடிகர் தருண் தப்பி சென்றார் என்று அப்பகுதி மக்கள் கூறியதை கேட்டு அந்த தகவல் நேற்று முழுதும் இணையத்தில் வைரலாகி வந்தன.

ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் தொலைகாட்சி ஊடங்கள், இணைய ஊடகங்கள் அனைத்தும் "புன்னகை தேசம்" படத்தில் நடித்த தருண் தான் இதனை செய்து விட்டார் என்று நம்பினர்.

தொடர்ந்து, பிரபல தொலைகாட்சி ஒன்றிற்குதொலைபேசி மூலம் பேட்டியளித்த நடிகர் தருண் அது நான் இல்லை. இரவில் இருந்து நான் வீட்டில் தான் இருக்கிறேன் என மறுத்திருந்தார்.


அது இப்போது உண்மை தான் என தெரிய வந்துள்ளது. ஆம், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றது புன்னகை தேசம் தருண் இல்லை. பிரபல தெலுங்கு நடிகர் ராஜ் தருண் என்று CCTV காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. காரின் பதிவெண்ணை ஆராய்ந்த போது நடிகர் ராஜ்தருணுக்கு சொந்தமான சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அந்த வாகனம் பதிவு செய்யப்ட்டுள்ளதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 


இவர் தெலுங்கில் பல்வேறு குறும்படங்களில் நடித்துள்ள இவர், உய்யாலா ஜம்பாலா, மஞ்சு, பலூன் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார். 

நேற்று அதிகாலை சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வால்வோ காரை ஓட்டி சென்றுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள அவுட்டர் ரிங் ரோடில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென்று சாலை தடுப்பில் மோதி கார் பள்ளத்தில் இறங்கியது. உடனடியாக காரில் இருந்து இறங்கிய ராஜ் தருண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை பரிசோதித்து பார்த்த போது அது ராஜ் தருண் தான் என்பது உறுதியாகியதை தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

You May Like
Previous Post Next Post
--Advertisement--