திரைப்பட தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக பாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தெலுங்கு மொழி படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த ’மகாநடி’ திரைபப்டத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிக்கையாக மகாநடியில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென் இந்திய சினிமா பிரபலங்களுக்கான அங்கீகாரம் தான் இந்த சைமா விருது விழா. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்நிகழ்ச்சி நேற்று தொடங்கியுள்ளது. கத்தாரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தென் இந்திய நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர்.
சைமா நிகழ்ச்சியில் விருதுகள் முக்கியதுவம் கொண்டிருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் மற்றும் நடிகைகள் அணிந்து வரும் நவநாகரீக உடைகளை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கின்றது. அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நடிகர்கள் அதை கச்சிதமாகவும் மேடையேற்றுவார்கள்.
அந்த வகையில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று சைமா விருது நிகழ்ச்சியில் சிவப்புக் கம்பளத்தை அலங்கரித்தார்.பட வாய்ப்புகளுக்காக உடல் எடையைக் குறைத்துக்கொண்டபின் அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது எனலாம்.
இதனை பார்த்தஅங்கிருந்த ரசிகர்கள், என்ன இப்படி ஒல்லி ஆகிடாங்க. இத்தனை நாள் புகைப்படத்தில் இவர் ஒல்லியாகி விட்டார் என்று பார்த்தோம். நேரில் ஆளே மாறிப்போயுள்ளாரே என்று ஷாக் ஆகித்தான் போனார்கள்.
மெலிந்த உடலமைப்பிற்கு ஏற்ப அவர் தேர்வு செய்த புடவை அவருக்கு கனக்கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. கருப்பு வெள்ளையில் அவர் அணிந்திருந்த புடவைக்கு ஏற்ப மேக் அப்பிலும் கருப்பு வெள்ளை காலகட்ட தீமை பின்பற்றியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,
Tags
keerthy suresh