ஆபாச வீடியோவில் சிக்கிய தமிழ் சீரியல் நடிகை - காதலன் மீது பரபரப்பு புகார்


சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடரில் துணை நடிகையாக நடித்து வருபவர் ஜெனிபர். இந்நிலையில், காதலன் தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக இவர் வடபழனி போலீசில் நேற்று இரவு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 


அதில் அவர் கூறியுள்ளதாவது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை நடிகரான பக்ருதீன் என்பவர் எனக்கு அறிமுகமானார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த பக்ருதீன் கடந்த வருடம் என்னை காதலிப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து அவருடன் நான் நெருங்கி பழகி வந்தேன். 

நான் அவருடன் நெருக்கமாக இருந்த நேரங்களில் என்னை ஆபாசமாக வீடியோ படம் எடுத்து வைத்து கொண்டு இப்போது பணம் கேட்டு மிரட்டி வருகிறார். ஏற்கனவே, பக்ருதீன் மீது திருவல்லிக்கேணி, புழல் போலீசில் புகார் செய்து இருந்தேன். அப்போது அவரை போலீசார் எச்சரித்து அனுப்பிவிட்டனர்.


தற்போது மீண்டும் பழைய வீடியோ காட்சிகளை வைத்துக்கொண்டு ஈனிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டுகிறார். நேற்று என் வீட்டிற்கு வந்த பக்ருதீன் எனது தாயை கொலை செய்து விடுவேன் என்றும் கூறிவிட்டு சென்றார். 

பக்ருதீன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார். இதையடுத்து பக்ருதீன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement