தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
தனது புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி சர்ச்சையில் சிக்கினார்.பின்னர் தொடர்ந்து சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.
பட வாய்ப்பு தருவதாக கூறி ஓட்டல் அறைக்கு வர சொல்லி என்னை ருசித்து விட்டு பட வாய்ப்புகள் தராமல் தூக்கி எரிந்து விட்டார்கள். சில நடிகர்கள் எனக்கு சாப்பாடு கூட வாங்கிக்கொண்டுக்காமல் அப்படியே அறையில் விட்டு விட்டு சென்றனர் என்று பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
தொடர்ந்து, நடிகைகளை வம்பிழுத்து வரும் இவர் நடிகை திரிஷா-வை மட்டும் ஆரம்ப காலத்தில் இருந்தே சர்ச்சையில் சிக்க வைத்து வருகிறார்கள். நான் சொல்லும் நடிகர்கள் ஒரு பக்கம் வரும் என்றால், திரிஷா வாயை திறந்தாள் ஒரு புத்தகமே போடலாம் என்று கிண்டலடித்தார்.
இப்போது, கூட நடிகை சமந்தாவின் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சமந்தாவை விட நான் தான் கவர்ச்சியானவள் என்று சர்ச்சையில் சிக்கினார். இதனை தொடர்ந்து, குட்டையான காற்சட்டையுடன் தொடை தெரியும் அளவிற்கு அமர்ந்து கொண்டு கையில் சிகாரை பிடித்த படி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




