ஒரு இரவுக்கு ஒரு கோடி - பாலியல் அழைப்புக்கு சுந்தர்.சி பட நடிகை அதிரடி பதில்


கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவு செய்வதை நடிகைகள் பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். 

அந்தவகையில் இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளியான 'ஆயிரத்தில் இருவர்' படத்தில் நடித்த சாக்‌ஷி சவுத்திரி தனது கவர்ச்சியான புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். 

இவர் இப்போது சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள இருட்டு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் இதுகுறித்து நடிகை சாக்‌ஷி சவுத்திரி, “எனது வீடியோக்கள் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் எனக்கு ஒரு இரவுக்கு ஒரு கோடி தருவதாக அழைப்புவிடுக்கிறார்கள். 


இதுபோன்ற அழைப்பை விடுத்தவர்கள் முட்டாள்கள். நான் விற்பனைக்கு அல்ல” என்று கூறியுள்ளார். நடிகைகளின் சமூகவலைதள பதிவுகளுக்கு இவ்வாறு ஆபாசமாக விமர்சனம் வருவதும் அதற்கு நடிகைகள் பதில் கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
Previous Post Next Post
--Advertisement--