லோகேஷ் கனகராஜ் இளம் இயக்குனராக சினிமாவில் களமிறங்க இப்போது கைதி என்ற படம் மூலம் வெற்றிநடைபோடுகிறார். கார்த்தி நடித்துள்ள இப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி, ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், இவர் அடுத்து விஜய்யை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார், படத்திற்கான படப்பிடிப்பும் நடந்து வருகிறது. ஆனால் விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கும் இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் அஜித் தானாம்.
முதலில் அஜித்திடம் இந்த கதையை கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால், அவர் ஏற்கெனவே வினோத் படத்திற்கு நாட்கள் ஓதுக்கியிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லையாம்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜை அழைத்த விஜய்யிடம் அந்த கதையை கூறியுள்ளார். கதை கேட்ட விஜய்க்கு உடனே பிடித்து போய்விடவே நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். அந்த கதை தான் தற்போது, "தளபதி64" படமாக தயாராகி வருகிறது.
மேலும், சூர்யாவை வைத்து இயக்கவிருந்த "இரும்புக்கை மாயாவி" என்ற படத்தை இயக்கவிருந்த லோகேஷ். விஜய் கால்ஷீட் கிடைத்த காரணத்தினால் அந்த படத்தை ஒத்தி வைத்துவிட்டார். இதனால், தற்போது இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைத்துள்ளார் சூர்யா.