சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் எண்ட்ரீ கொடுத்தவர்.
அதை தொடர்ந்து அசல், வெடி ஆகிய படங்களில் நடித்தார்.
இவருக்கும் மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய் வர்தே என்கிற தொழில் அதிபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து
சமீராவுக்கு சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது.
தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடும் பழக்கம் உடைய இவர் தற்போது தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் சமீரா ரெட்டியா இது என்று ஷாக் ஆகி வருகிறார்கள். சமீரா ரெட்டி இந்த புகைப்படம் குறித்து கூறுகையில், " இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு சிரிப்பு வரலாம். என்னுடைய டீன் ஏஜ் பருவத்தில் நான் உடல் எடையை குறைக்க மிகவும் கஷ்டப்பட்டேன். என்னுடைய தோற்றமே எனக்கு அவநம்பிக்கையை கொடுத்தது. அதிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு மீண்டு வந்தேன் என்று கூறியுள்ளார்.