ஒட்டுத்துணியின்றி நடிகை ஸ்ருஷ்டி டாங்கே - இதுக்கெலாம் தனி தைரியம் வேணும் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை ஸ்ரேயா நடிப்பில் வெளியான திரைப்படம் "மழை". இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் சாய் ராஜ்குமார். தற்போது, "ராஜாவுக்கு செக்" என்ற படத்தை இயக்கியுள்ளார். 

இந்த படம் கடந்த 24-ம் தேதி ரிலீஸ் ஆனது. சில படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் தியேட்டர்கள் காலியாக கிடக்கும். நாட்கள் செல்ல செல்ல கூட்டம் வரும். அந்த சில படங்களில் இந்த படமும் ஒன்று என கோரலாம். இந்தப் படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆன நிலையில் இந்த படம் குறித்த நல்லவிதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. 

இந்த படத்தை பாராட்டி பல பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அப்படி, இந்த படத்தை பாராட்டி வரும் ட்வீட்டுகளை ரீ-ட்வீட் செய்து வருகிறார் படத்தின் ஹீரோ சேரன். அந்த வகையில், அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார். ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும். 

அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும்.. இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது.. மிக்க நன்றி.. ஸ்ருஷ்டி டாங்கே என்று கூறியிருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருஷ்டிடாங்கே. 


மேலும், இதுகுறித்து தன்னுடையகருத்தை தெரிவித்த ரசிகர் ஒருவர் "நான் அந்த காட்சி பார்க்கும் போது ஒரு குழந்தையை பார்க்கும் வேதனையான தந்தையாக உணர்ந்தேன் இந்த காட்சியை ஆபாசம் என்று சொல்பவன் கண்டிப்பாக யோக்கியன் என்பது சந்தேகமே? நன்றி " என கூறியுள்ளார்.