நடிகை குஷ்பூ சினிமாவில் ஒரு நேரத்தில் உச்சத்தில் இருந்தவர். ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அத்தனை முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்.
அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய நிகழ்வும் உண்டு.அவரின் ஸ்டைலை ஃபாபோவ் பண்ண பெண்களும் உண்டு. வயதாகிவிட்டாலும் தற்போது சின்னத்திரை சீரியலான லக்ஷ்மி ஸ்டோரில் நடித்து வருகிறார்.
இயக்குனர் சுந்தர்.சி ஐ திருமணம் முடித்து தன் இருமகள்களுடன் வாழ்ந்து வருகிறார். அதே வேளையில் அரசியலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 1980ல் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பயணத்தினை ஆரம்பித்த
இவர், 90-களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். தமிழ் தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் நடித்தது மட்டுமின்றி தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது தன்னுடைய இள வயதில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது ஏதேனும் படத்தின் போஸ்டரா..? அல்லது வேறு எதற்காவது எடுக்கப்பட்டதா என்ற எந்த விபரத்தையும் பதிவு செய்யாமல் "நீண்ட நாட்களுக்கு முன்பு" என்று மட்டும் டேக் செய்து இந்த புகைப்படத்தை மட்டும் வெளியிட்டுள்ளார்.
மூன்று ஆண்கள் குஷ்புவை குண்டுகட்டாக தூக்கி வைத்திருக்கும் படி உள்ளது அந்த புகைப்படம்.


