நடிகை ஜோதிர்மயி-யின் தற்போதைய நிலை கண்டு ஷாக் ஆகிகிடக்கும் ரசிகர்கள்..! - எப்படி இருக்கிறார் பாருங்க...!


தமிழில் தலைநகரம், நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஜோதிர்மயி, நான் அவனில்லை படத்தில் இடம் பெற்ற " தேன் குடிச்ச நிலவு, விழி மயங்கும் இரவிது " என்ற பாடல் மூலம் இளசுகள் மத்தியில் தேன் குடிச்ச நிலவு என்று அறியப்பட்டவர் அம்மணி. 

இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2004-ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து 8 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து விட்டு 2011-ல் அவரை விவாகரத்து செய்து விட்டார். 

பின்னர் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான அமல் நீரத் என்பவரை 2015-ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அமல் நீரத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் மனைவி ஜோதிர்மயியின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

அதில் ஜோதிர்மயி மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஜோதிர்மயிக்கு என்னாச்சு? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

--- Advertisement ---